தீபாவளிக்கு
அஜித் நடித்த வேதாளம் படம் வெளிவந்ததை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள்
தீபாவளிக் கொண்டாட்டத்தை விட வேதாளம் கொண்டாட்டத்தைத்தான் அதிகம்
கொண்டாடினார்கள். தமிழ்நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதும் அவர்களின் சொந்த
செலவிலேயே திரையரங்குகளை அலங்கரிப்பது, பேனர்கள் வைப்பது என பல
விஷயங்களைச் செய்து தியேட்டர்களை திருவிழாக் கோலம் ஆக்கினார்கள்.
கடந்த
சில நாட்களாக அஜித் ரசிகர்களின் வீடியோக்கள் பலவற்றை சமூக வலைத்தளங்களில்
பார்க்க நேர்ந்தது. பொதுவாக ரசிகர்கள் தியேட்டர்களை அலங்கரிப்பதை அவர்களது
சொந்த செலவில் செய்ய மாட்டார்கள். குறிப்பிட்ட நடிகர்தான் ரசிகர்
மன்றத்திற்கு பணம் கொடுத்து அனைத்தையும் செய்ய வைப்பார். ஆனால், அஜித்
ரசிகர்கள் அவர்கள் சொந்தப் பணத்தைப் போட்டு இப்படிச் செய்வது ஆச்சரியமான
ஒன்று. அதிலும் அஜித் அவருடைய ரசிகர் மன்றங்களைக் கலைத்து எத்தனையோ
வருடங்கள் ஆகிவிட்டது.
ரசிகர்களின்
அளவு கடந்த அன்புக்கும், பாசத்திற்கும் அஜித் என்ன செய்யப் போகிறார்.
அவர்களது ரசிகர்களே அதை எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அஜித் ரசிகர்கள்
அஜித்தை ஒரு முறையாவது நேரில் பார்த்து அவரை வாழ்த்த வேண்டும் என்று
விருப்பப்படுகிறார்கள். அதைக் கூட அஜித் செய்வதில்லை என்ற வருத்தம்
அவர்களிடம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.
ரசிகர்கள்
செய்யும் ஒவ்வொரு விஷயமும் எப்படியும் அஜித் காதுக்குப் போய்விடும்.
ரஜினிகாந்துக்குப் பிறகு ஒரு நடிகர் மீது ரசிகர்கள் எந்த பிரதிபலனும்
பார்க்காமல் அன்பு செலுத்துவது அஜித்துக்கு மட்டுமே என்பது பல
சந்தர்ப்பங்களில் நிரூபணமாகியுள்ளது. அப்படிப்பட்ட ரசிகர்களுக்காக அஜித்
என்ன செய்யப் போகிறார். குறைந்தபட்சம் அடிக்கடியாவது அவர்களைச் சந்திப்பாரா
?...
No comments:
Post a Comment