தீபாவளியையொட்டி
கடந்த 10ந் தேதி கமல் நடித்து, தயாரித்த தூங்காவனம் படமும், ஏ.எம்.ரத்னம்
தயாரிப்பில் அஜீத் நடித்துள்ள வேதாளம் படமும் வெளிவந்தது. படம் வெளியான
நாள் முதல் தமிழ்நாட்டில் அடைமழை பெய்து கொண்டிருக்கிறது. இருந்தாலும்,
கமல், அஜீத் ரசிகர்கள் கொடுத்த ஓப்பனிங்கால் வேதாளம் வசூலை தெறிக்கவிட்டது.
தமிழ் சினிமா சரித்திரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு நாள் வசூலே 10
கோடியை தாண்டியது என்கிறார்கள். தூங்கவானம் படம் ஆவரேஜான, நிதானமான வசூலை
கொடுத்துக் கொண்டிருந்தது.
தீபாவளி
செவ்வாய்கிழமை, அடுத்து வந்த புதன், வியாழனும் நல்ல கலெக்ஷன்தான். அடுத்து
வரும் சனி, ஞாயிறு கலெக்ஷனை தயாரிப்பாளர்கள் ஆர்வத்துடன்
எதிர்பார்க்கிறார்கள். இதுவரை கமல், மற்றும் அஜீத்தின் ரசிகர்கள் படங்களை
பார்த்துவிட்டார்கள். அவர்கள் அடாத மழை பெய்தாலும், விடாது வெயில்
அடித்தாலும் பார்த்து விடுவார்கள்.
பொதுமக்கள்
இனிமேல்தான் தியேட்டருக்கு வருவார்கள். ஆனால் அவர்களை வரவிடாமல் மழை
கொட்டுகிறது. வானிலை ஆராய்ச்சி மைய தகவல்படி இன்னும் இரண்டு மூன்று நாட்கள்
அடை மழை பெய்யும் என்று தெரிகிறது. இதனால் வருகிற சனி, ஞாயிறு கலெக்ஷன்
பாதிக்கப்படுமோ என்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர்
அதிபர்கள் கவலை அடைந்துள்ளனர்.
எந்திரன் - 2 படத்திற்காக ரஜினியின் டூப்புக்கு மேக்கப் டெஸ்ட்
யானை
படுத்தாலும் குதிரை மட்டம் என்று கிராமத்துப்பக்கம் சொல்வார்கள்.
அதைப்போல், தோல்விப்படத்தில் நடித்தாலும் ரஜினி ரஜினி தான். அவரது
மார்க்கெட், மவுசு, அவருடைய படத்தின் பிசினஸ் எதையும் மற்ற ஹீரோக்களால்
எட்டவே முடியாது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படம்
தோல்வியடைந்தாலும் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும்
கபாலி படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சம் தொட்டுள்ளது.
கபாலி
படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது மலேசியாவில் முகாமிட்டிருக்கிறார்
ரஜினி. அங்கு படப்பிடிப்பை முடித்த பிறகு தாய்லாந்து, ஜப்பான் ஆகிய
நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அதை முடித்த பிறகே சென்னை திரும்ப
திட்டமிட்டுள்ளார் ரஜினி. இது ஒரு புறமிருக்க, ரஜினி அடுத்து நடிக்க உள்ள
எந்திரன் 2 படத்திற்கான மேக்-அப் டெஸ்ட் நடத்திக் கொண்டிருக்கிறார் ஷங்கர்.
இதற்காக ஹாலிவுட்டிலிருந்து மேக்-அப் மேன் ஒருவரும்
வரவழைக்கப்பட்டிருக்கிறார்.
ரஜினி
கபாலி படப்பிடிப்பில் இருக்க, இங்கே யாருக்கு மேக்கப் டெஸ்ட் நடத்துகிறார்
ஷங்கர்? ரஜினியைப் போலவே தோற்றம் கொண்ட 50 வயது மதிக்கத்தக்க சில நபர்களை
வரவைத்து அவர்களுக்குத்தான் மேக்-அப் டெஸ்ட் நடத்தி வருகிறார் ஷங்கர். இந்த
மேக்கப் டெஸ்ட்டில் தேர்வாகும் நபர்தான் எந்திரன் -2 படத்தில் ரஜினி
சம்பந்தப்பட்ட பல காட்சிகளுக்கு ரஜினியின் டூப்பாக நடிக்க இருக்கிறார்.
கபாலி படப்பிடிப்பு முடிந்ததும் எந்திரன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள
இருக்கிறார் ரஜினி. இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
24 ஆம் தேதி 24 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
சூர்யாவின்
2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள பசங்க-2 இம்மாதம் 27- ஆம்
தேதி ரிலீசாகவிருக்கிறது. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யா, அமலா
பால், பிந்துமாதவி மற்றும் பல சிறுவர்கள் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி
நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கும் மற்றொரு படமான 24 படத்தின்
படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் முடிவடைந்தது. விக்ரம் குமார்
இயக்கத்தில் உருவான 24 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது படு
வேகமாக நடந்து வருகிறது.
சூர்யாவுக்கு
ஜோடியாக சமந்தா நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.
வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ள சூர்யா இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
வருகிற 24-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனை சூர்யாவே அதிகாரபூர்வமாக
அறிவித்துள்ளார். படத்தின் பெயரும் 24 என்பதால் 24 ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக்
வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் அந்த தேதியை தேர்வு
செய்திருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயனுக்கு 25 கோடி சம்பளம்.?
ரஜினி
முருகன் படம் வெளிவர வாய்ப்பில்லை என்பதால் அதை மறந்துவிட்டு தற்போது
தன்னுடைய மானேஜர் ஆர்.டி.ராஜாவின் பெயரில் 24AM ஸ்டுடியோ நிறுவனம் சார்பில்
தயாராகும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை
அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கப்போகும் அடுத்த படத்தை நானும் ரௌடிதான் பட
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார். அஜித்தின் ஆஸ்தான
தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம் இப்படத்தை தயாரிக்கப்போகிறார்.
இவரது
தயாரிப்பில் அஜித் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த வேதாளம் படம் இதுவரை 30
கோடிக்கு மேல் வசூல் செய்து பணத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. இந்த
படத்தில் கிடைத்த லாபத்தை அப்படியே தன் அடுத்தப் படத்துக்கான
முதலீட்டாக்கிவிட்டார் ஏ.எம்.ரத்னம். அதாவது, தனது படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டார் ஏ.எம்.ரத்னம்.
சிவகார்த்திகேயனிடம்
கால்ஷீட் கேட்டு பிரபல தயாரிப்பாளர்கள் சிலர் அப்ரோச் செய்திருந்தனர்.
அவர்களை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்து விட்டு ஏ.எம்.ரத்னத்துக்கு உடனடியாய்
சிவகார்த்திகேயன் கால்ஷீட் கொடுக்க என்ன காரணம்? ஏ.எம்.ரத்னம் தருவதாக
சொன்ன பெரிய சம்பளம்தான் காரணம் என்கிறார்கள் திரையுலகைச் சேர்ந்தவர்கள்.
சிங்கிள் பேமெண்ட்டாக 25 கோடி தருவதாக சொன்னதால்தான் ஏ.எம்.ரத்னத்துக்கு
உடனடியாய் சிவகார்த்திகேயன் டேட் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது.
No comments:
Post a Comment