Tuesday 17 November 2015

என்னை அறிந்தால்-2க்கு தயாரான கெளதம்மேனன்

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை இயக்குவதில் தற்போது இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த  வகையில், இதற்கு முன்பு தான் தமிழில் இயக்கிய படங்களை மற்ற மொழிகளுக்கு ரீமேக் மட்டுமே செய்து வந்த கெளதம்மேனன், சூப்பர் ஹிட்டான படங்களைகூட இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால், அஜித்தை வைத்து தான் 
இயக்கிய என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயார் நிலையில் இருக்கிறாராம்.

yennai-arindhaal-shooting-spot-stills-2-

என்னை அறிந்தால் படத்தை இயக்கியபோதே, இந்த படம் ஹிட்டானால் இரண்டாம் பாகத்திற்கான கதையை ரெடி 
பண்ணிவிடுவேன் என்று அஜீத்திடம் கூறியிருந்தாராம் கெளதம்மேனன். அஜீத்தும் அதற்கு ஓகே சொல்லி விட்டாராம். அதனால், 
என்னை அறிந்தால் வெளியாகி வெற்றி பெற்றதும், அடுத்த பாகத்திற்கான கதையை ரெடி பண்ணி வைத்துள்ள கெளதம்மேனன், 
அடுத்து அஜீத் எப்போது கால்சீட் கொடுத்தாலும அந்த படத்தை இயக்க தயாராக உள்ளாராம்.



மேலும், என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்காவை காப்பாற்ற வருபவராக நடித்த அஜீத், கணவரை இழந்து விட்டு ஒரு 
குழந்தையுடன் இருக்கும் திரிஷாவை திருமணம் செய்து கொள்ள தயாராவார். அப்போது திரிஷா கொல்லப்படுவார். அதன்பிறகு 
அந்த குழந்தைக்கு தான் அப்பாவாகி விடுவார். ஆனால், இரண்டாவது பாகத்தில் அவரது மகளான அந்த பெண்ணுக்கு ஒரு பெரிய
பிரச்சினை வருமாம். அதிலிருந்து அவரை அஜீத் எப்படி மீட்கிறார் என்பதுதான் கதையாம். இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் 
தெரிவித்துள்ள கெளதம்மேனன், என்னை அறிந்தால் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய சமூக பிரச்சினையையும் கலந்து கதை 
பண்ணியுள்ளாராம்.

No comments:

Post a Comment