Wednesday 31 December 2014

ஐ படக் கதையை முதலில் சொன்னதே ரஜினிக்குத்தான்! - ஷங்கர் வெளியிட்ட ரகசியம்

ஐ படத்தின் கதையை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே ரஜினிகாந்திடம் சொன்னதாகவும், அவர் நடிக்க மறுத்ததால்தான் இப்போது விக்ரம் நடித்ததாகவும் ஷங்கர் தெரிவித்துள்ளார். 
 
 
ஐ படத்தின் இந்தி இசை வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஷங்கர், ஐ படம் உருவான விதம் பற்றிக் கூறுகையில், இந்தக் கதையை முதலில் உருவாக்கியது ரஜினிக்காகத்தான் என்றார். "பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இந்தக் கதையை உருவாக்கினேன். அப்போது முதலில் ரஜினிக்குத்தான் இந்தக் கதையைச் சொன்னேன். ஆனால் அவரால் அப்போது நடிக்கமுடியவில்லை. 15 ஆண்டுகள் கழித்து இப்போது விக்ரமை வைத்து இந்தக் கதையை எடுத்துள்ளேன். 
 
ஐ ட்ரைலர் ராம் கோபால் வர்மாவுக்கு பிடித்திருந்ததை அறிந்து மகிழ்கிறேன். ஆனால் அவரது ட்வீட் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை," என்றார். 
 
தமிழகத்தில் ரஜினி, ஜெயலலிதாவை விட பலம் மிக்கவர் ஷங்கர்தான் என்று ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment