Monday 7 June 2021

நடிகை மனோரமா

 1958ஆம் ஆண்டு மாலையிட்ட மங்கை என்ற படத்தில் நகைசுவை நடிகையாக அறிமுகம் ஆகி , 1963 ஆம் ஆண்டு கொஞ்சும் குமரி என்ற படத்தில் கதாநாயகியாக  ஆகி, அலங்காரி , பெரிய மனிதன் ஆகிய மேலும் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்து மீண்டும் காமெடிக்கு அவர்....... யார் இந்த மனோரமா? எப்படி வளர்ந்தது இந்தக் கலை ஆல மரம்.? எப்படி எங்கே வளர்ந்து விரிந்தது இது ? 




கவிஞர் கண்ணதாசன் 'மாலையிட்ட மங்கை' படத்தை தயாரிக்க ஆரம்பித்தார். 
நாடக நடிகையாக இருந்த மனோரமாவுக்கு ஏதாவது வேடம் தரவேண்டும் 
என்பதற்காக 'காமெடி' நடிகையாக ஒப்பந்தம் செய்தார். நகைச்சுவை 
நடிகையாக அதுவரையில் மனோரமா நடித்ததே இல்லை. 

பயந்து போன மனோரமா "இதற்கு முன் இப்படி வேஷத்தில் நடிச்சதில்லயே..." 
என்று கூற, அதற்கு கவிஞர் கண்ணதாசன், "பரவாயில்லை நடி எல்லாம் 
சரியாப்போகும் உன் திறமைக்கு இதில் நல்ல பேர் வரும்" என்று ஆறுதலும் 
தைரியமும் சொல்லி நடிக்க வைத்தார். அன்று அவர் சிரிப்பு நடிகையாக 
அறிமுகப்படுத்திய வாழ்க்கைதான் மனோரமாவுக்கு கடைசிவரை நிலைத்து
 நிற்கிறது. 

நகைச்சுவை நடிகையாக வலம் வந்த மனோரமாவை ஹீரோயினாக 
அறிமுகப்படுத்தியவர் டி.ஆர்.சுந்தரம். தனது மாடர்ன் தியேட்டர்ஸ் 
தயாரிப்பில் அவரே இயக்கிய ‘கொஞ்சும் குமரி’ படத்தில் மனோரமாவை 
நாயகியாக்கினார். இதில் ஹீரோவாக நடித்தது ஆர்.எஸ்.மனோகர். 

மனோரமாவை ஹீரோயினாக மக்கள் ஏற்றனர். படமும் ஓடியது. ஆனாலும்
 ஒரு சில படங்களுக்கு பிறகு அவரால் கதாநாயகியாக நீடிக்க முடியவில்லை. 
மீண்டும் நகைச்சுவை  வேடங்களுக்கே அழைத்தனர் . 

மனோரமா கண்ணதாசனிடம் "எல்லாம் உங்களாலதான் . கதாநாயகியாக 
நடிக்கும் லட்சியத்தில்  இருந்த என்னை நீங்கள் காமெடி நடிகையாக 
அறிமுகப்படுத்தியதால்தான் இப்ப எல்லோரும் காமெடிக்கு கூப்பிடறாங்க 
என்று செல்லமாகக் கோபித்துக் கொள்ள , 

அந்த மகா கவிஞன் தனக்கே உரிய கள்ளமில்லாச் சிரிப்போடு மனோரமாவிடம்  
 " அட பைத்தியமே... நீ கதாநாயகியாக மட்டும் நடித்தால் பத்து வருடம்தான் 
தாக்குப் பிடிப்பாய். அதே நகைச்சுவை நடிகையாகிவிட்டால் நீ விரும்பும் வரை
 நடித்துக் கொண்டே இருப்பாய்" . என்றார் . 

செல்லக் கோபம் குறையாமல்  "எனக்கு சாகும்வரை கூட நடிக்க ஆசைதான் " 
என்றார் மனோரமா . கவியரசர் மறுபடியும் சிரித்துக் கொண்டே "சரி" என்றார் . 
அந்த சரி என்ற வார்த்தையின் ஆயுள் 55 ஆண்டுகள் நீடித்து இப்போது 
அமரத்துவம் அடைந்து இருக்கிறது .

 டைரக்டர் கே. பாலசந்தர், " நான் நூற்றுக்கும்  மேற்பட்ட 
நட்சத்திரங்களை அறிமுகப் படுத்தியிருப்பதாகவும்,  கவியரசர் கண்ணதாசன் 
மனோரமாவை  மட்டுமே அறிமுகப்படுத்த முடிந்தது என்றும் கூறினார். நான் 
நூறு பேர்களை அறிமுகப்படுத்தியதும், அவர் மனோரமாவை 
அறிமுகப்படுத்தியதும் சமம். அந்த நூறு பேருக்கு சமமான திறமைசாலி 
மனோரமா" என்றார். 

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கவிஞர் கண்ணதாசன் அமெரிக்காவிற்குப 
போகும்போது மனோரமாவிடம்,"யார் யாருக்கோ பாராட்டு விழா  
நடத்துகிறார்கள். உன்னைப் போன்ற நல்ல கலைஞர்களை தேடிப் பிடித்து 
விழாக்கள் நடத்துகிறார்களா என்றால்  இல்லை. நான்அமெரிக்காவில் இருந்து
வந்ததும் உனக்கு பெரிய அளவில் ஒரு பாராட்டு விழா நடத்தப் போகிறேன்" 
என்று கூறிவிட்டுச் சென்றார். 

ஆனால் உயிரும் உடலுமாகச் சென்ற கண்ணதாசன்  குடைசாய்ந்த தங்கத் 
தேர்போல பிணமாகத்தான்  இந்தியா வந்தார்.  இதன் பிறகு எத்தனையோ
பேர் பாராட்டுவிழா நடத்த அனுமதி கேட்டும் மனோரமா மறுத்து விட்டார்.


கவிமொழி இரவுக்ககாயிரம் கண்கள், ...

 கவிமொழி





இரவுக்ககாயிரம் கண்கள், ... 

இரவுக்ககாயிரம் கண்கள், 
பகலுக்கு ஒன்றேவொன்று - 

காலத்தை வென்ற கவிஞர் கண்ணாதாசன் ஆளுமை என்பதை தாண்டி, 

அவர் ஒரு அனுபவம். தனியொரு மனிதன் வாழ்ந்து கடக்க வேண்டிய அனுபவத்தை.... 

தீர்த்து கழிக்க வேண்டிய கர்மங்களை, 
பட்டும், பெற்றும் கிடைக்க வேண்டிய தெளிவை 
வெறும் வாசிப்பால் வழங்கிவிட வல்லது கவியரசு
கண்ணதாசனின் படைப்புகள். 

எளிமையான வரிகள் என்று வார்த்தையை மட்டும் ரசித்து கடக்கிற சிக்கல் அவர் படைப்புகளுக்கு உண்டென்ற போதும். ..

அதன் ஆழத்தை, அர்த்தத்தை நின்று நிதானித்து கடக்க வேண்டியது வாசகனுக்கு விடப்பட்ட சவால்!!  

மன்னனின் கௌரவம் சதுரங்கம் நடுவிலே 
மரிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே 
ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே அறுபதை இருபது வெல்லுமா உலகிலே ...

இது திரைப்படத்தில் ஒரு மகனுக்கும் தந்தைக்கும் நடக்கிற கதைச்சூழலுக்கு பொருத்தமான வரிகள் என்றபோதும்.
 இந்த வரிகளை தனித்து படிக்கிற வேளையில்... பலவித தரிசனங்களை தர வல்ல வரிகள் இவை. 

"மன்னனின் கௌரவம் சதுரங்கம் நடுவிலே; மரிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே" 

கலை, 
அரசியல், 
குடும்பம்

 என எந்த தளங்களை எடுத்து கொண்டாலும், அவற்றில் முந்தைய தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்கும் இடையே சமகாலத்தில் நிலவும் சூழலை சூட்சுமமாக சொல்லும் வரிகள்...  

முரண்களை பேசுவதில் முத்திரை பதித்தவர்,
 சுவை குன்றாமல், மொழியின் வளமை குறையாமல் கருத்தை ஆழமாக விதைப்பதில் வித்தகர்.

 பார்ப்பவன் குருடனடி, 
படித்தவன் மூடனடி என்று தொடங்கும் பாடலில் 

நேர்மையின் பக்கம் நிற்பதன் இயலாமையை சொல்ல முடிந்த அவரால் நன்னெறி வாழ்வதன் மூலம் இடையில் வரும் இடர்களை தாங்குவதன் மூலம் வெற்றிகள் 
நம் வசமே என்பதையும், அதற்கான காலமும், நேரமும், போதிய பொறுமையும் மனம் வழங்கவேண்டும் என்பதையும் உரக்க சொல்லி நம்பிக்கையை வளர ஒரு போதும் கவிஞர் தவறியதில்லை.

 மூடருக்கு மனிதர் போல முகமிருக்குதடா மோசம் நாசம் வேஷமெல்லாம் நிறைந்திருக்குதடா காலம் மாறும் வேஷம் கலையும் உண்மை வெல்லுமடா கதவு திறந்து பறவை பாடிச் செல்லுமடா.. என்றும் சொல்லும் போதும், 

"காலமகள் கண்திறப்பாள் சின்னையா

நாம் கண் கலங்கி கவலைப்பட்டு என்னையா? 

நாலுபக்கம் வாசலுண்டு சின்னையா 

நமக்கு அதிலே ஓர் வழியில்லையா சொல்லையா? 

என்று பாடலின் மூலம் அவர் கேள்வியெழுப்பும் போது, 

வாழ வழியில்லை என்று யாருக்கு தான் சொல்லத்தோன்றும். வாய்ப்புகள் நாலு திசையில் கொட்டி கிடப்பதையும், 

அதில் ஒன்றை கையிலேந்தி வெற்றியை நுகர எக்காலத்தவருக்கும் கவிஞர் நட்டு வைத்த வைட்டமின் வரிகள். 

 சாமானியனுக்கும் கவிதை அனுபவம் சாத்தியம் என்பதை உணர்த்திய வரிகள் கவிஞருடையது.... 

இரவின் கண்ணீர் பனித்துளி என்றார் முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார் 

இயற்கை அழுதால் உலகம் செழிக்கும் மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் இயற்கை சிரிக்கும் 

என்கிற வரிகளில் இருக்கும் 
எளிமை நடையும்... 
உவமை சுவையும் கேட்பவரின் மனதை விசாலப்படுத்துபவை.

 அதே சமானியனுக்கு உலக இலக்கியத்தை அறிமுகம் செய்தவரும் கவிஞர் தான் எனில் அது மிகையில்லை. .. 

பாடல் வெளிவந்த வேளையில் 
பெரிதும் பாரட்டப்பட்ட வரிகளான 

"இரவுக்கு ஆயிரம் கண்கள், பகலுக்கு ஒன்றே ஒன்று அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று " 

என்ற போது அவர் உள்நாட்டு சாத்திரங்களை மட்டுமல்ல 
பிறநாட்டு 
நல்லறிஞர் சாத்திரங்களையும் சாமனிய இரசிகனுக்கும், வாசகனுக்கு கொண்டு சேர்த்தவர். மேல் வரிகளின் சாயல் ஆங்கில இலக்கியத்தில் 

"பிரான்சிஸ் வில்லியம் போர்டிலியன் எழுதிய 

"The night has thousand eyes, and the day but one: yet the light of the bright world dies with the dying sun" 

 என்றவரிகளில்
கவிஞர் சொல்வளம் மின்னுவதை காண முடியும். 

"கூட்டும் இசையும் கூற்றின் முறையும்; காட்டும் என்னிடம்" எனும் போது 

"தில்லையில் கூத்தனே" என்றும், 

"எதிலும் இயங்கும் இயக்கமும் நானே " என்ற வரிகளை கடக்கையில் 

"அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய், அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய்" 

எனவும், "ஆடும் கலையின் நாயகன் நானே" என்ற வரியை ரசிக்கையில் 

நள்இருளில் நட்டம் பயின்றாடும் நாதனையும்
 மனம் இயல்பாகவே இணைத்து கொள்கிறது

. ஒரு கவிதை வரியின் வெற்றி இதுவே. 

அது பாடபெறுகிற சூழலை தாண்டி அதை 
வாசிப்பவன்/கேட்பவன் மனவிரிவை கொள்வானெனில்,... 

புதிய அனுபவங்களை பெறுவானெனில் அதுவே உயர் கவிதை.

படித்ததில்
பிடித்தது