Thursday 16 October 2014

கத்தி: கதை(?) விமர்சனம்...!

கதைப்படி ஹீரோ நம்ம தற்காலிக சூப்பர்ஸ்டார்தான்.... எங்க பாத்தாலும் பவர்கட்டா இருக்கே, எல்லார் வாழ்க்கைலயும் வெளிச்சத்த ஏத்தலாம்னு ஒரு உயர்ந்த குறிக்கோளோட  ஊர்ல சின்னதா ஒரு கடை போட்டு பெட்ரோமேக்ஸ் லைட் வாடகைக்கு விட்டுட்டு இருக்கார். ஊர் திருவிழாவுக்கு புல் லைட் சப்பளையும் அவருதான். அத வெச்சே செமையா இண்ட்ரோ சாங் எடுத்திருக்காங்க. குரூப் டான்சர்ஸ் எல்லாரும் ஆளுக்கொரு பெட்ரோமேக்ஸ் லைட்ட தூக்கி பிடிச்சிட்டே ஆடுறது கண்ணைப் பறிக்குது. இப்படியே போய்ட்டு இருக்கும் போது ஒரு நாள் ஒரு பொம்பள கைல கூடையோட வந்து பெட்ரோமேக்ஸ் லைட்டு வேணும்னு கேக்குது... அந்த இடத்துல நம்ம டாகுடரோட ரியாக்சனை பார்க்கனுமே.... கண்ணு சிவக்குது, கை துடிக்குது, நாடி நரம்பெல்லாம் புடைக்குது, பின்னணி மியூசிக் அதிருது........ சான்சே இல்ல, அப்படி ஒரு பந்தாவான சீன்....! கூடை வெச்சிருக்கவங்களுக்கு எல்லாம் பெட்ரோமேக்ஸ் லைட் கிடையாதுன்னு சொல்லிடுறார். அந்தம்மாவும் திட்டிக்கிட்டே போய்டுது.


ஆனா இத வில்லனோட அல்லக்கை ஒருத்தன் ஒளிஞ்சி நின்னு பாத்துடுறான். அவன் நேரா போய் வில்லன்கிட்ட சொல்லிடுறான். வில்லன் உடனே அல்லக்கைகள் எல்லார் கைலயும் ஆளுக்கொரு கூடைய கொடுத்து போய் பெட்ரோமேக்ஸ் லைட்டு வாங்கிட்டு வாங்கடான்னு அனுப்பி வைக்கிறான். டாகுடருக்கு கோவம் கோவமா வருது, என்னடா இது இன்னிக்குன்னு பாத்து பெட்ரோமேக்ஸ் லைட் வாங்க வர்ரவங்கள்லாம் கைல கூடையோடவே வர்ராங்கன்னு. அப்போ கூடவே சுத்திட்டு இருக்க காமெடியன் இது வில்லனோட வேலைன்னு சொல்லி புரியவைக்கிறான். அவ்வளவுதான் டாகுடருக்கு கோபம் கொப்பளிக்குது.

கூடைய வெச்சி ஆளனுப்புறவனை கூடைக்குள்ளயே வெச்சி அடிப்பேண்டான்னு பஞ்ச் டயலாக் பேசியபடி வில்லன்களை அடிச்சு துவம்சம் பண்றார். அப்போதான் அவருக்கு தெரியுது கூடைகள்லாம் இந்தியாவுல்ல செஞ்சது இல்லேன்னு. வில்லன்கள் பின்னாடியே ஃபாலோ பண்ணி, வெளிநாட்டுல இருந்து கூடைகளை கடத்திட்டு வர்ராங்கன்னு கண்டுபுடிக்கிறார். இருந்தாலும் அவருக்கு சந்தேகம், உள்நாட்டுலயே கூடை கிடைக்கும் போது வெளிநாட்டுல இருந்து ஏன் கடத்திட்டு வரனும்னு. இதை கண்டுபிடிச்சே ஆகனும்னு வில்லன்களை புடிச்சி ரகசியமா ட்ரைனேஜ் பைப் லைன்களுக்குள் அடைச்சு வைக்கிறார். அங்கேயே பெட்ரோமேக்ஸ் லைட்டோட இரவு பகலா காவலுக்கும் இருக்கார். அப்போ வில்லன் ஆள் ஒருத்தன் டாகுடரோட டெடிக்கேசனை பாத்துட்டு கண்கலங்குறான். ஏண்ணே கூடை மேல உங்களுக்கு இவ்ளோ கோவம்னு கேக்குறான்,

அதைப் பாத்து டாகுடரும் கண்கலங்குறார். உடனே ப்ளாஷ்பேக் தொடங்குது. டவுசர் போட்டபடி சமந்தா ஆடிக்கொண்டிருக்கிறார். கூடவே டாகுடரும், டூயட் சாங்காம். டாகுடர் இதிலும் ஹீரோயின் டவுசரில் கையை வைக்கும் மேனரிசத்தை தொடர்வது அல்டிமேட். ரசிகர்களுக்கு நல்ல தீனி. லவ் சீன்ஸ் இப்படியே நல்லா போய்ட்டு இருக்கு, அப்போ ஒருநாள் ஹீரோயினோட செல்ல நாயைக் காணலைன்னு பெட்ரோமேக்ஸ் லைட்ட எடுத்துட்டு ஊர் பூரா தேடுறார் டாகுடர். எங்கே தேடியும் கிடைக்கல. ஹீரோயின் ஒரே அழுகையா அழுகுது. இந்த காட்சில தியேட்டரே ஒப்பாரி வைக்க போவது உறுதி. அழகான பொண்ணுங்க அழுதா யார்தான் தாங்குவா? காலைல பாத்தா அந்த நாய் ஒரு கூடைக்குள்ள செத்துக் கெடக்குது, டாகுடர் பதறி போறார். அந்த கூடையை நாய் உள்ளெ இருக்குன்னு தெரியாம கவுத்தி போட்டதே அவர்தான். குற்ற உணர்ச்சில துடிக்கிறார். அப்பவே சபதம் செய்றார் இனி கூடை வெச்சிருக்கவங்களுக்கு பெட்ரோமேக்ஸ் லைட் கொடுக்கவே மாட்டேன்னு.... டக்னு ஃப்ளாஷ்பேக் முடியுது, எல்லா வில்லனுங்க கண்ணுலயும் கண்ணீர்...  டாகுடரும் கண்ண தொடச்சிக்கிட்டே பெட்ரோமேக்ஸ் லைட்ட தொடைக்கிறார்.

வில்லன்களைத் தேடி வெளிநாட்டு கூடை வியாபாரி (தொழிலதிபர்) வர்ரார். இதை கேள்விப்படும் டாகுடர் தலைய லைட்டா புளிச் பண்ணி மீசைய பெருசா வெச்சிக்கிட்டு இன்னொரு கெட்டப் போட்டு ரகசியமா அந்த ட்ரைனேஜ் பைப்ப விட்டு வெளில வர்ரார்.  வில்லன் கூட பயங்கர சண்டை நடக்கிறது. தொழிலதிபர் அடிதாங்க முடியாமல் உண்மைகளை சொல்லிவிடுகிறார். வெளிநாட்டுக் கூடைகளை கடத்திக் கொண்டுவந்து உள்நாட்டுக் கூடை தொழிலை நசுக்கி இந்திய பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்ய வேண்டும் என்று சீன உளவுத்துறை சதித் திட்டம் தீட்டி இயங்குவதை கண்டுபிடிக்கிறார். பின்னணியில் இருக்கும் சீன சதிகாரர்களை சுற்றி வளைத்து சதித்திட்டத்தை முறியடித்து இந்திய பொருளாதாரத்தை டாகுடர் எப்படி காக்கிறார் என்பதே மீதிக்கதை...!  எந்த கெட்டப்பில் போய் இதை சாதிக்கிறார் என்பதை படு சஸ்பென்சாக வைத்திருக்கிறார்களாம். அதனால் நாமும் அதை சொல்லப் போவதில்லை.

டாகுடருக்கு இந்த கதைக்களம் மிகவும் புதுசு. இருந்தாலும் ஜமாய்த்திருக்கிறார். இதுவரை உள்ளூர் ரவுடிகள், வெளியூர் தீவிரவாதிகள்னு பட்டைய கெளப்பிட்டு இருந்த டாகுடரை இந்த முறை வெளிநாட்டுல இருந்து வர்ர டான்களை இரண்டு கெட்டப்புகளில் அடித்து துவைக்கும் கடினமான பணியை ஒப்படைத்திருக்கிறார் முருகதாஸ். ஒரே மாதிரி கதையில் நடிக்கிறார் என்று இனி யாருமே சொல்லமுடியாத அளவுக்கு அவரை இரண்டு கெட்டப்பில் நடிக்க வைத்து சாதித்திருக்கிறார் முருகதாஸ். பெரிய முன்னேற்றம்தான். அது போல டிரைனேஜ் பைப்புக்குள் துணிச்சலாக நடித்திருக்கும் டாகுடரின் தைரியத்தை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். பாதிக்கும் மேல் படம் அதற்குள்தான் வருகிறது என்பதால் மிகப்பிரம்மாண்டமாக ட்ரைனேஜ் செட் போட்டிருக்கிறார்கள். படம் வந்ததும் உங்கள் ஊரில் நல்ல தியேட்டரில் சென்று டிக்கட் எடுத்து பாருங்கள்!

தமிழ் சினிமாவின் வியாபாரப் பொருளாகும் ஈழப் போராளிகள்

ஈழம் குறித்து தமிழகத்தில் எடுக்கப்படும் திரைப்படங்கள் இரண்டு வகையானவை. ஈழத்தின்பால் உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஒருவகை. ஈழம் குறித்த திரைப்படத்துக்கு சர்வதேச அளவில் சட்டென்று ஓர் அங்கீகாரம் கிடைக்கும், படத்துடன் நாமும் பிரபலமாகிவிடலாம் என்ற நப்பாசையில் எடுக்கப்படுபவை இரண்டாவதுவகை. 


இந்த இரண்டுவகை திரைப்படங்களும் ஈழம் குறித்த சித்திரத்தை சர்வதேச அரங்கில் முன் வைத்ததில்லை என்பது வேதனையான உண்மை.
சினிமா என்பது ஒரு கலை வடிவம். உணர்ச்சிப்பெருக்குடன் அதனை அணுகும்போது கைவிரல்களுக்கிடையே நழுவும் நீரைப்போல சொல்ல வரும் விஷயங்கள் நழுவிவிடுகின்றன. தங்கராஜ் போன்ற உணர்ச்சிகரமான ஈழ ஆதரவாளர்களின் திரை ஆக்கங்களுக்கு நேர்ந்த சறுக்கல் இதுதான். சர்வதேச அரங்கில் முன்வைக்கப்படுவதற்கான வலு அவற்றிற்கு இல்லை.

அல்ஜீரியர்களின் போராட்டத்தை இன்றும் சர்வதேச அரங்கில் உரத்துப் பேசும் பேட்டில் ஆஃப் அல்ஜீர்ஸ் போன்ற ஒரு திரைப்படத்தை வெறும் உணர்ச்சிகளால் மட்டுமே உருவாக்கிவிட முடியாது. தங்கராஜ் போன்றவர்கள் இங்குதான் தோற்றுப் போகிறார்கள்.
பிரவீன் காந்த், பச்சை முத்து போன்ற வியாபாரிகள் எடுக்கும் புலிப்பார்வை போன்ற திரைப்படங்கள் வணிகத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டவை. வரலாறு, அதன் உண்மைகள். அவை சமூகத்தில் உருவாக்கப் போகும் அதிர்வுகள் எல்லாம் இவர்களுக்கு பொருட்டில்லை.

பார்வையாளர்களின் மேலோட்டான உணர்வுகளை தூண்டி காசு பார்க்க நினைக்கும் உணர்ச்சிகர வியாபாரிகள் இவர்கள். யுத்த பின்னணியில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் என்று புலிப்பார்வைக்கு விளம்பரம் தந்திருக்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் இறுதிகட்ட போரின் ஆரம்ப நாள்களில் போராளிகளை வைத்து எல்லாளன் என்ற திரைப்படத்தை எடுத்தனர். ஒளிப்பதிவாளர் உள்பட ஒரு சிலர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். படத்தில் நடித்தவர்கள் அனைவரும் போராளிகள். படத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் அசலானவை, போரில் பயன்படுத்தப்படுபவை.

 முழுக்க போராளிகளின் நடிப்பில் உருவான ஒரே படம் என்றால் அது எல்லாளன்தான். குறைபட்ட திரைக்கதை மற்றும் திறனற்ற ஒளிப்பதிவால் படம் உள்ளூர் பார்வையாளர்களைக்கூட திருப்பதிப்படுத்தவில்லை. என்றாலும் போர்க்களத்தில் எடுக்கப்பட்ட, முழுக்க போராளிகள் நடித்த, போராளிகள் தயாரித்த படம் எல்லாளன்.
அப்படம் குறித்து நன்றாக தெரிந்தும் யுத்த பின்னணியில் தயாரான முதல் படம் என்று எப்படி இவர்களால் விளம்பரம் தர முடிகிறது? எல்லாமே வியாபாரம். அதில் உண்மைக்கும் நேர்மைக்கும் இடமில்லை.
இப்படியொரு சூழலில் திலீபன் என்ற பெயரில் ஒரு படம் தமிழில் தயாராகி வருகிறது. ஈழத்துக்காக உண்ணாவிரதம் இருந்து மரித்த முதல் தமிழன் திலீபன். திலீபனாக நந்தா நடிக்க இயக்குனர் ஆனந்த மூர்த்தி படத்தை எடுத்து வருகிறார். எண்பது சதவீத படம் முடிந்துள்ளது.
திலீபனின் சொந்த ஊருக்குப் போய் அவர் சம்பந்தப்பட்டவைகளை திரட்டி படத்தை எடுக்கிறேnம் என்று எல்லோரையும் போலவே ஆனந்த மூர்த்தியும் கூறுகிறார். படத்தில் பிரபாகரன், கிட்டு, மாத்தையா என்று முதல்வரிசை ஈழப்போராளிகள் அனைவரும் இடம்பெறுகிறார்கள். உணர்ச்சியை முதலீடாக்கியே திலீபன் படத்தை ஆனந்த மூர்த்தி எடுத்து வருவது அவரது பேச்சில் தெரிகிறது.

ஈழம் குறித்த நேர்மையான பதிவை தணிக்கைக்குழு அனுமதிப்பதில்லை. ஈழம் என்ற வார்த்தையையே அது அனுமதிப்பதில்லை. இவையெல்லாம் தெரிந்தும் தணிக்கைக்குழுவை திருப்திப்படுத்தும் சமரசங்களுடன் ஈழம் குறித்த படங்களை தமிழ் சினிமா உற்பத்தி செய்து தள்ளுகிறது. இது அப்பட்டமான வியாபாரம்.

இலங்கை ராணுவம் ஈழப்போராளிகளை ஒருமுறைதான் கொன்றது. தமிழ் சினிமாவோ பலமுறை, சிறுக சிறுக கொல்கிறது.

மொக்கைப் படங்களை ரசிகர்கள் கிண்டல் செய்வது தப்பா? வெங்கட்பிரபுவை கழுவி ஊற்றிய ஃபேஸ்புக் பதிவர

மொக் கைப் படங் களை ரசிக ர்க ள் கிண் டல் செய் வது தப்ப ாம். வரம் பு மீறி கிண் டல் செய் கிறா ர்கள ாம்.

ஆண்ட ாண் டு கால மா சினிமாக்காரங்க அவங்களோட படத்தப்பத்தி மீடியாவுல விடுற பீலாவ விடவா ரசிகர்கள் வரம்பு மீறிட்டாங்க. குப்பை படத்த எடுத்து வச்சிட்டு படம் அப்படி வந்திருக்கு இப்படி வந்திருக்குன்னு ஓவர் சீன் போட்டு மக்களை தியேட்டருக்கு வர வப்பாங்களாம். காசு குடுத்து 3 மணி நேரம் வேஸ்ட் பண்ணி படம் பாத்து ஏமாந்தவன் எதுவும் சொல்லக் கூடாதாம். எந்த ஊர் நியாயங்க இது?

அண்னன் வெங்கட் பிரபு கொதிச்சி எழுந்து சில கேள்விகள் கேட்டிருக்கார். "நீங்கள் நல்ல ரசிகர்களாக இருந்திருந்திருந்தால், ‘தங்க மீன்கள்’ ஒரு மகத்தான வெற்றிப் படமாகி இருக்குமே?"

நீங்க யாருக்காக படம் எடுக்கறீங்களோ அத அவங்க ஏத்துக்கலன்னா அதுல‌ நிச்சயம் ஏதோ சரியில்லைன்னு தான் அர்த்தம். கமர்சியல் விஷயங்கள் இல்லாத படங்கள் நல்ல படங்கள்னு நீங்க ஒரு அளவுகோள் வச்சிகிட்டா அதுக்கு ரசிகர்கள் பொறுப்பல்ல!

ஐயா, நீங்க கமர்சியல் படமே எடுங்க. கலைப் படம் தான் வேணும்னு நாங்க கேக்கல. எதுவா இருந்தாலும் நல்லா இருந்தா கொண்டாடிகிட்டு தான் இருக்கோம். பொய் சொல்லி மக்களை தியேட்டருக்கு இழுத்தீங்கன்னா ஏமாந்தவன் திட்டத்தான் செய்வான்.

உங்களுக்கு சிறப்பா வர்றத எடுக்கறதும், சில நேரத்துல அது எடுபடாம போறதும் சரிதான். ஆனா நாங்க அப்படி எடுத்து வச்சிருக்கொம் இப்படி எடுத்து வச்சிருக்கோம்னு ஏன் ஓவர் பில்டப் கொடுத்து மக்கள ஏமாத்தறீங்க?
உங்க மனச தொட்டு சொல்லுங்க... எடுத்தவங்களுக்கே குப்பை படம், இது நாலு நாளைக்கு மேல ஓடதுன்னு தெரிஞ்சும் அந்த நாளு நாள்ல கலெக்ஷன் எடுத்துடனும்னுதான ஓவரா பில்டப் கொடுக்குறீங்க? பாக்குறவன் ஏமாந்தா நமக்கென்ன, படம் மோசம்னு ரீச் ஆகறதுகுள்ள வர்ற கலெக்ஷன பாத்துடனும்னுதான பொய் சொல்றீங்க?!


ப்ளா ப் ஆன எத் தன படங் களுக ்கு '100 நாள்' போஸ் டர் ஒட் டி இருக ்கீங ்க? "'திரு மதி தமிழ ்' வெற் றிகர மான 100வ து நாள்" அப்ட ீன் னு போஸ் டர் பாத்து உங்களுக்கே கோவம் வரலன்னு சொல்லுங்க?! எவ்வளவு நாள் தாங்க நாங்களும் பொறுத்துப்போம்?

இதுக்கெல்லாம் ஒரு மபடி மேலே போய், ரிலீஸ் ஆகி, மொக்க படம்னு மக்கள் காறி துப்பிணதுக்கு அப்புறமும் அதுல நடிச்சவங்க, இசைச்சவங்க எல்லாரையும் கூட்டிட்டு வந்து படம் சூப்பர்‍னு டிவி ஷோ நடத்தி இன்னும் ஏமாந்தவன் எவனாச்சும் கிடைக்க மாட்டானான்னு தேடுற வேலைதான் இப்போ அதிகம் நடக்குது.

இப்போல்லாம் ஸ்டோரி டிஸ்கஷன்லயே "'ஃபேஸ் புக்ல' கழுவி கழுவி ஊத்துவாங்க, ஒழுங்க யோசிங்க"‍‍ ‍ன்னு பேசிக்கிறாங்களாம். மக்கள் கலாய்க்க ஆரம்பிச்சாத்தான் இவங்க ஓரளவுக்காவது திருந்துவாங்க!