தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் சமந்தாவுக்கு இருக்கும் டிமாண்ட் மிரள வைக்கிறது.
மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி, விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில்
நடித்தபோது சமந்தா சாதாரணமாகத்தான் இருந்தார். அதற்குப் பிறகு வந்ததுதான்
இந்த அசுர வளர்ச்சி.
விஜய், விக்ரம், சூர்யா, உதயநிதி அனைவருடனும் இப்போது தமிழில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் தெலுங்கில்.
தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான த்ரிவிக்ரம் அடுத்து
ரொமான்டிக் படமொன்றை இயக்குகிறார். கதை முடிவானதும், அவர் கால்ஷீட்
வாங்கியது சமந்தாவிடம். சரி, நாயகன்?
நாயகன் யார் என்பதை முடிவு செய்யும் முன்பே சமந்தாவிடம் கால்ஷீட்
வாங்கிவிட்டார் த்ரிவிக்ரம். அதன் பிறகு, சமந்தாவுக்கு யார் சரிவருவார்கள்
எனப் பார்த்து நித்தினை நாயகனாக்கியிருக்கிறார். அனிருத் இந்தப் படத்துக்கு
இசையமைக்கிறார்.
த்ரிவிக்ரமின் முந்தைய இரு படங்களிலும் சமந்தாவே நாயகி என்பது முக்கியமான தகவல்.
No comments:
Post a Comment