நயன்தாரா, ஹன்சிகா என்று காதல் தேடி ஓடிய சிம்பு திடீரென்று ஒரு
சுப்ரபாதத்தில் காவி உடுத்தி இமயமலைக்கு பயணமானது டோட்டல் தமிழ் நாட்டையும்
அப்செட்டாக்கியது. அப்படியே சாமியராகி ரஜினீஸ் மாதிரி வருவாரோ என்று
ஒருசிலருக்கு பயம். ஆனால், அப்படி எந்த பயங்கரவாதமும் செய்யவில்லை சிம்பு.
போன வேகத்தில் திரும்பி வந்தார். கிளைமேட் ஒத்துக்கலை போல.
ரொம்ப தாமதமாக இப்போது, நான் ஏன் சாமியாரானேன் என பேட்டி தந்துள்ளார்.
சிம்பு சின்ன வயதிலேயே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார் அல்லவா. எதுக்கு
இப்படி சின்ன வயசிலயிருந்தே உழைச்சுகிட்டும் ஓடிகிட்டும் ஒருக்கணும் என்று
ஒருநாள் சிம்புக்கு தோணியிருக்கு. உடனே ஆன்மீகத்தில் குதித்து இமயமலையில்
மேலெழுந்திருக்கிறார்.
சரி, அங்கயே அப்படியே செட்டிலாகலாம்னுதான் இருந்தேன். ஆனா, சிம்பு
பயந்துட்டான்னு சொல்வாங்கயில்லையா, அதனாலதான் ரிட்டர்ன் டிக்கெட் போட்டேன்
என்றிருக்கிறார்.
அடுத்தவன் என்ன சொல்வான்னு யோசிக்காம, நமக்கு நல்லதுன்னு தோணுறதை
செய்யணுங்கிறதுதான் ஆன்மீகத்தோட பாலபாடம். லௌகீகத்தின் அத்தனை சுகங்களையும்
அனுபவிச்சுகிட்டு ஆன்மீக கொட்டாவிவிடுறதில் நடிகர்களை அடிச்சுக்க
முடியாது.
நீங்க பேசுங்கண்ணா.
No comments:
Post a Comment