Saturday 5 December 2015

நடிகைகளுடனான பந்தம் எதுவரை? மகேஷ் பாபு அதிரடி விளக்கம்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கு பெண் ரசிகைகள் தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் கூட அதிகம். அவர், பெரிய ஹீரோ தான் என்றாலும் நாட்டில் நடக்கும், பிரச்னைகள், அல்லது சினிமா உலகில் நடக்கும் சர்ச்சைகள் என எதற்கும் எந்தக் கருத்தும் அவ்வளவு சுலபமாகச் சொல்லிவிட மாட்டார். இந்நிலையில் கணவன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என கருத்து கூறியது பெண்கள் மத்தியில் இன்னும் மகேஷ் பாபுவுக்கான ரசிகர்களை அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை என்றே கூறவேண்டும்.

அவர் கூறுகையில் “ ஒரு கணவன் என்பவன் முதலில் அவன் மனைவிக்கு பொறுப்பாளனாக இருக்க வேண்டும்.  தன் மனைவிக்குப் பொறுப்பாகச் செயல்படாத மனிதன் எப்பேர்ப்பட்டவனாக இருந்தாலும் அவன் முட்டாள் தான்.  நான் சென்னையில் படிக்கும் போது நான் பெரிய ஸ்டாரின் மகன் என்று யாருக்கும் தெரியாது.  என் நண்பர்கள், ஆசிரியர்களுக்குக் கூட நான் இன்னார் மகன் எனத் தெரியாது. ஆனால் என் அப்பா எங்கள் குடும்பத்துக்கு அவ்வளவு பொறுப்பாக நடந்துகொண்டார். என் அப்பாவிடம் படித்த பாடமே இந்த குடும்ப ஈடுபாடு.

பெரிய நடிகரானால் கண்டிப்பாக கிசுகிசுக்கள் வருவது சாதாரணம். ஆனால் நாமும் சில நேரங்களில் அதற்கு பொறுப்பாகிறோம். என்னைப் பொறுத்தவரை எனக்கும் என்னுடன் நடிக்கும் நடிகைகளுக்குமான பந்தம் ஷூட்டிங்குடன் முடிந்தது. படப்பிடிப்பு முடிந்துவிட்டால் நடிகைகள் போன் கால்களைக் கூட நான் எடுக்க மாட்டேன். ஏனெனில் என்னைக் குறித்து கிசுகிசுக்கள் வருவதை என்னாலும் சரி முக்கியமாக என் மனைவியாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் ஒரு மனைவியாக இந்தக் கிசுகிசுக்களை ஏற்றுக்கொள்ளும் தேவையும் அவருக்கு இல்லை எனக் கூறியுள்ளார் மகேஷ் பாபு.

இதனால் பல நடிகர்கள் மகேஷ் பாபு குறித்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment