Saturday, 4 April 2015

இயக்குனர் சிகரமும் காவிய கவிஞரும்

இயக்குனர் சிகரம் பாலசந்தர் பாடல்கள் எடுப்பதில் வல்லவர். அவரது படங்கள் மட்டுமின்றி பாடல்களும் புதுமை நிறைந்ததாக இருக்கும். வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் இடம்பெறும், சிப்பி இருக்குது முத்து இருக்குது பாடல் ஒன்றே போதும், அவரது திறமையை அறிய.


 
தூர்தர்ஷனில் காவிய கவிஞர் வாலி தனது மலரும் நினைவுகளை பதிவு செய்த நிகழ்ச்சியில் இயக்குனர் சிகரமும் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியை நடத்தியவர் நெல்லை ஜெயந்தா. அந்த அருமையான நிகழ்ச்சி நூலாகவும் வெளிவந்துள்ளது. 
 
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் விழிகளில் கண்டேனே என்ற வாலியின் அற்புதமான பாடல் குறித்தும், அந்தப் பாடல் தனக்கு கற்றுத் தந்த பாடம் குறித்தும் இயக்குனர் சிகரம் அதில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 
"மதுரையில் பறந்த மீன்கொடியை உன் விழிகளில் கண்டேனே ரொம்ப அற்புதமான பாட்டு. எல்லா ஊர்ப் பெயர்களும் அதில் வரும். ஆனால் அதில ஒரு டிராஜடி ஆகிப்போச்சு. நான் ரொம்ப ரசித்த பாட்டு, ஜெமினி பிரமாதமாக நடிச்சிருப்பார். அந்தப் பாடல் இடைவேளையில் வரும். ஏற்கனவே ஒன்றரை மணிநேரம் தம்மடிக்காம தம்பிடிச்சு உட்கார்ந்திருக்காங்க. அப்ப இந்தப் பாட்டு வந்தவுடன் பாதிபேர் எழுந்து வெளியே போயிட்டாங்க. அப்போ எல்லாம் உள்ளுக்குள்ள சிகரெட் பிடிக்கக் கூடாதுன்னு சட்டம் இருந்தது. பல தியேட்டர்களிலும் இதே நிலை.
 
"எப்பவுமே இடைவேளை வரும்போது டைரக்டர் ஜாக்கிரதையாக இருக்கணும். அங்கபோயி இந்த மாதிரி ஸ்லோ உள்ள காட்சியை வைக்காமல் இடைவேளைக்குப் பிறகு கொடுத்தால் ரசிப்பாங்க. இடைவேளை நேரத்தில் இந்தப் பாட்டை கொடுத்ததால் எழுந்து போயிட்டாங்க. கொடுத்தது என் தப்பு. ஃபோன் பண்ணி பார்த்தால் எல்லா ஊர்களிலும் இதேநிலை என்றார்கள்.  கஷ்டமா போச்சு. மதுரை ஆடியன்ஸ்கூட எழுந்து போனார்கள்னு சொன்னாங்க. சரின்னு சொல்லிட்டு அந்தப் பாட்டை எல்லா ஊர்களிலும் நீக்க சொல்லிட்டேன். 
 
"இதிலிருந்து என்ன கத்துகிட்டேன்னா... ஒரு படத்துல பாட்டு வைக்கிற இடத்தக்கூட கவனமா பண்ணணும்னு. வெறும் சீனுன்னு நான் எழுதுறேன். நான் டைரக்ட் பண்ணிட்டு போயிடறேன். பாட்டு சீன் அப்படியில்ல. பாட்டுன்னா ஒரு கவிஞர் வர்றாரு. ஒரு மியூஸிக் டைரக்டர் வர்றாரு. நான் உட்கார்ந்துக்கிறேன். அப்புறம் நடன இயக்குனர். இவ்வளவு பேரும் சேர்ந்து பண்ற உழைப்பு வீணாகிப் போயிடக் கூடாதில்லையா? அதனால ஒரு பாட்ட எந்த இடத்தில் போடணும், போடக் கூடாதுன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்."
 
 - இயக்குனர் சிகரத்தின் இந்த வார்த்தைகளிலிருந்து அவர் ஒரு திரைப்படத்தை, திரைப்பட ரசிகர்களின் மனநிலையை எப்படி நுட்பமாக அணுகி புரிந்து வைத்துள்ளார் என்பதை அறியலாம். 

பாடல்களை படமாக்குவதைப் போலவே அதனை எழுதி வாங்குவதிலும் தனித்துவமானவர் இயக்குனர் சிகரம் பாலசந்தர். அதுபற்றி வாலி கூறியதை நெல்லை ஜெயந்தா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
 
இனி வாலியின் அனுபவம்.
"பாடல் எழுதி வாங்குவதில் பாலசந்தருக்கும் அண்ணாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நான் எம்.ஜி.ஆருக்கு எழுதின முதல் படம், நல்லவன் வாழ்வான். அண்ணாதான் டயலாக். அண்ணா வந்து, இந்தப் பாட்டில் இந்தக் கருத்தெல்லாம் வரலாம் அப்படீன்னு எழுதிக் கொடுத்திடுவாரு. உடுமலை நாராயண கவி எல்லாம் அண்ணா எழுதின வரிகளை பல்லவி ஆக்கியிருக்காங்க. அண்ணா மாதிரி பாலசந்தரும் பாட்டுல என்னென்ன வேணும்னு சொல்லிடுவாரு. பாட்டுக்கு மெட்டீரியல் தர்றதுங்கிறது அண்ணாவுக்கு பிறகு இவர்தான். இரு கோடுகள் படத்துல வர்ற புன்னகை மன்னன் பாட்டு பட்டிமன்றம் மாதிரி இருக்குன்னு சொல்றீங்க. அந்தப் பாட்டு அப்படி இருக்கணும்னு சொன்னதே அவர்தான்."
 
ஒரு படத்துக்கு ஒரு பாடலாசிரியரை பயன்படுத்தவே பாலசந்தர் விரும்புவார். அது ஏன்?
 
"ஒரு படத்துக்கு ஒரு கவிஞர்னு சொல்லிட்டா, அவர்கிட்ட முழு கதையையும் சொல்லிடுவோம். அப்பவே அவர்களும் கதைக்குள்ள வந்துவிடுவார்கள். எப்ப பாட்டு வேணும்னு நாம கேட்டாலும் உடனே எழுதித்தர முடியும். ஒருமுறை வாலி தன்னுடைய புதுக்கவிதை புத்தகம் ஒன்றை என்கிட்ட கொடுத்தாரு. அப்போ நான் அக்னி சாட்சின்னு ஒரு படம் பண்ணலாம்னு இருந்தேன். அப்போ வாலி எழுதின, நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன், என் நிழலையோ பூசிக்கிறேன், அதனால்தான் உன் நிழல் விழுந்த மண்ணைக்கூட என் நெற்றியில், நீறுபோல் இட்டுக் கொள்கிறேன் என்ற புதுக்கவிதை என் நினைவுக்கு வந்தது. 
 
"அது என்னை ஏதோ செய்தது. உடனே வாலிகிட்ட இதைக் கொஞ்சம் முன்னும் பின்னும் மாற்றி மியூசிக் பண்ணி எடுத்துக்கிறேன்னு சொன்னேன். அந்தப் பாட்டு பிரமாதமாக வந்தது. அவருடைய நிறைய புதுக்கவிதைகளை நான் அவரிடம் இருந்து திருடி என் படத்துல வச்சிருக்கேன்னு அவர்கிட்ட சொல்வேன். எனக்கு புதுக்கவிதை மேல அப்படியொரு மோகம்."
 
பாலசந்தர் படத்தில் வாலி எழுதிய அனேக நல்ல பாடல்களில் முக்கியமானது, எதிர்நீச்சல் படத்தில் வருகிற, வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல். இது பற்றி பாலசந்தர் பெருமிதமாக பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
 
"எதிர்நீச்சல் படத்தில் கஷ்டப்பட்டு ஒருத்தன் முன்னுக்கு வர ஆசைப்படுகிறான். ஒரு தன்னம்பிக்கை பாட்டு, டைட்டில் பாடலா வைக்கணும்னு கேட்டேன். கவிஞர் உடனே எழுதிக் கொடுத்தார். அந்தப் பாடல்தான், வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல். இந்தப் பாட்டைப் பற்றி இன்னொரு விஷயம் சொல்லணும். அப்போ அண்ணா அவர்கள் உடல்நலம் சரியில்லாமல் இருந்த சமயத்தில் இந்தப் படத்தைப் பார்த்தார். 45 நிமிடம் பேசினார். படம் முழுவதும் பார்த்திட்டு, படம் ரொம்ப நல்லா இருக்கு. இந்த, வெற்றி வேண்டுமா பாட்டை யார் எழுதினதுன்னு கேட்டார். நான், வாலி எழுதினார்னு சொன்னேன். உடனே அவர், ரொம்ப நல்லா இருக்குன்னு அவர்கிட்ட சொல்லுங்கன்னு சொல்லச் சொன்னார்."

Tuesday, 3 March 2015

எங்கு போனாலும் ஆசை போகாது

சந்திரோதயம் என்ற திரைப்படம் 1966இல் வெளிவந்தது. எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, ஜெயலலிதா, பாரதி, நம்பியார், அசோகன், நாகேஸ், மனோரமா, பண்டாரிபாய் என பிரபல்யங்கள் நடித்திருந்தார்கள்.

அது தினத்தந்தி ஆசிரியர் ஆதித்தனாரோடு அறிஞர் அண்ணாவும் தி.மு.கவும் முரண்பட்டிருந்த காலம்.

ஒரு பத்திரிகை ஆசிரியர் எப்படி இருக்கக் கூடாது, எந்தவித செய்திகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று சொல்ல வந்த திரைப்படம்தான் சந்திரோதயம். அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த எம்.ஆர்.ராதாவின் பாத்திரம் ஆதித்தனாரையே குறிவைத்து எடுக்கப்பட்டதாக விமர்சனங்கள் இருந்தன. மற்றும்படி எம்.ஜி.ஆருக்கான மசாலாக்களோடு படம் இருந்தது.
சந்திரோதயம் திரைப்படத்தில் எனக்குப் பிடித்தது அதில் இடம் பெற்ற பாடல்களே. விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர்கள் பிரிந்த நேரம்.

இசையில் விஸ்வநாதன் தனித்து நின்று அதிக ஈடுபாடு காட்டியிருப்பார். பாடல்கள் எல்லாம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. சந்திரோதயம் படத்தில் கதையென்று பெரிதாக எதுவுமே இல்லை. ஆனால் பாடல்கள் மட்டும் அசத்தல். எங்காவது அந்தப் படப் பாடல்கள் ஒலிக்கும் பொழுது, செய்து கொண்டிருக்கும் வேலைகளை அப்படியே விட்டு விட்டு பாடல்களுடன் ஒன்றி விடுகிறது மனது.

சந்திரோதயம் திரைப்படத்தில் எழுத்தோட்டத்துடன் ஆரம்பிக்கிறது சீர்காழி கோவிந்தராஜன் பாடல். 'புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்' என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளுக்கு சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரல் மேலும் உணர்ச்சியைக் கூட்டி எம்மைக் கட்டிப் போட்டு விடும்.

'சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?', 'எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்' என்று ஆளை இழுத்து இருத்தி வைத்துக் கேட்க வைக்கும் பாடல்கள் அந்தப் படத்தில் இருக்கின்றன. ஆனால் நகைச்சுவையோடு சொல்லப்பட்ட இன்னும் ஒரு பாடல் அந்தப் படத்தில் இருக்கிறது. என்னை மிகவும் கவர்ந்த பாடல் அது. 'காசிக்குப் போகும் சந்நியாசி உன் குடும்பம் என்னாகும் நீ யோசி' என்ற பாடலே அது. சீர்காழி கோவிந்தராஜனும், ரி.எம் சௌந்தரராஜனும் இணைந்து பாடி இருப்பார்கள். பாடல் வரிகள் கவிஞர் வாலி. மேடைப் பேச்சுக்களிலேயே கவிஞர் வாலியிடம் நக்கலும், நகைச்சுவையும் இருக்கும். இங்கே பாடலிலும் அது இருக்கிறது.

வாலியின் நகைச்சுவைப் பாடல்கள் நிறையவே இருக்கின்றன. குறிப்பாக 'அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா..', 'வரவு எட்டணா செலவு பத்தணா..', 'சேதி கேட்டோ சேதி கேட்டோ..' என்று பலதைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

எம்.ஜி.ஆர் படங்களிலும் நகைச்சுவைப் பாடல்கள் இருந்திருக்கின்றன. அப்படி இடம்பெறும் நகைச்சுவைப் பாடல்களை நகைச்சுவை நடிகர் பாடுவது போன்றே அமைத்து இருப்பார்கள். சந்திரோதயம் திரைப்படத்தில் அது விதிவிலக்கு. இங்கே எம்.ஜி.ஆரும், நாகேசும் இணைந்து நகைச்சுவையாகப் பாடுவதுபோல் அமைத்திருந்தார்கள். கூடவே மனோரமாவும் நடித்திருந்தார். அன்று இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்ட பாடலாகவும் இது இருந்திருக்கிறது.

<p>எங்கு போனாலும் ஆசை போகாது</p>
https://www.youtube.com/watch?v=A1UhTax2liY

எம்.ஆர்.ராதா நகைச்சுவைக் காட்சியில் நடிக்கும் பொழுது சிலசமயங்களில் இறுக்கமாக, ஆணவமாக நின்று அதிகார தோணையில் கட்டளை இடுவது போல் தனது நகைச்சுவையை வெளிப்படுத்துவார். இன்னொரு சமயம் தனக்கே உரிய சிரிப்பை உதிர்த்து ஏளனமாகப் பேசி குரலை உயர்த்தியும், தாழ்த்தியும் வசனத்தின் உள்ளே பொடி வைத்து நகைச்சுவையைக் காண்பிப்பார்.

பெரிய இடத்துப் பெண் படத்தில் எம்.ஆர்.ராதாவிற்கு பண்ணையார் வேடம். கோவிலில் சாமி கும்பிடுவது போல் ஒரு காட்சி இருக்கும். நிஜ வாழ்க்கையில் எம்.ஆர்.ராதாவோ கடைந்தெடுத்த நாத்திகர். சினிமாவிலும் நடிக்க வேண்டும். தனது கொள்கையில் பிறளவும் கூடாது என்பதற்காக சாமி கும்பிடும் பொழுதே நகைச்சுவையைக் காண்பிப்பார். பொன்னார் மேனியனே என்று தேவாரம் பாடும் பொழுது தேவாரப்பாடலின் இடையில் தனக்கே உரித்தான பாணியில் வசனம் ஒன்றைப் பேசி இருப்பார்.

'அப்பனே நாளைக்கு புது நெல் போரடிக்கிறோம். பலன் ஒண்ணுக்கு நூறாய் கிடைச்சால்
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைப்பேனோ'
என்று தேவாரத்தைப் பாடி முடிப்பார்.

https://www.youtube.com/watch?v=rmRlWmVH-H8

பலே பாண்டியாவில் சிவாஜியுடனான 'மாமா மாப்பிளே' பாடலில் எம்.ஆர்.ராதாவின் நடிப்பு அசத்தல். இந்தப் பாடல் காட்சியையும், அடுத்த வீட்டுப் பெண் படத்தில் வரும், 'கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே..' பாடல் காட்சியையும் பிரதி செய்து, இரண்டையும் கலந்து 'மாமா நீ மாமா..' என்ற ஒரு பாடல் காட்சியை சுந்தர்.சி தனது உள்ளத்தை அள்ளித்தா படத்தில் மணிவண்ணனையும், கவுண்டமணியையும் நடிக்க வைத்து படமாக்கி இருந்தார். ஆனாலும் அடுத்தவீட்டுப் பெண்ணில் தங்கவேலுவும், ரி.ஆர்.ராமச்சந்திரனும், பலேபாண்டியாவில் எம் .ஆர். ராதாவும், சிவாஜி கணேசனும்தான் உள்ளத்தை அள்ளிச் சென்றவர்கள்.

வழமையாக நாகேசுக்கு ஏ.எல்.ராகவன்தான் பாடலுக்கான குரல் தருவார். ஏ.எல்.ராகவன் குரலில் ஒரு இனிமை குழைந்து இருக்கும். ஆரம்பத்தில் நல்ல நல்ல மெலடிகளை தன் குரலில் குழைத்துத் தந்த ஏ.எல்.ராகவன் பின்னாளில் நகைச்சுவையான பாடலுக்குள் தன்னை அடக்கிக் கொண்டார்.

தி.மு.கவை விட்டு கவிஞர் கண்ணதாசன் பிரிந்து சென்ற பொழுது, அறிஞர் அண்ணா கண்ணதாசனுக்காக சொன்ன வார்த்தைகள் 'எங்கிருந்தாலும் வாழ்க'
அண்ணா சொன்ன வார்த்தைகளை முதலாகக் கொண்டு கவிஞர் கண்ணதாசன் நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்திற்கு எழுதிய பாடல்தான் 'எங்கிருந்தாலும் வாழ்க.. உன் இதயம் அமைதியில் வாழ்க..'. இந்தப் பாடலுக்கு அற்புதமாக அமைந்தது ஏ.எல்.ராகவனின் குரல்தான்.

கசடதபற வல்லினமாம், ஙஞணநமன மெல்லினமாம், யரலவழள இடையினமாம் என்று 'அன்று ஊமைப் பெண்ணல்லவோ இன்று பேசும் பெண்ணல்லவோ...' என்ற பாடலில் தமிழும் சொல்லித் தந்தவர்தான் இந்த ஏ.எல்.ராகவன். இவரது குரல் எம்.ஆர்.ராதாவுக்கும் பொருந்திப் போயிருந்தது.
இருவர் உள்ளம் என்ற திரைப்படம். எழுத்தாளர் லக்சுமியின் பெண்மனம் என்ற கதையை வைத்து கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்கராவ், பி.சரோஜாதேவி, ரி.பி.முத்துலக்சுமி நடித்து 1963இல் வெளிவந்த திரைப்படம்.

'பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்',
'கண்ணெதிரே தோன்றினாள், கனிமுகத்தைக் காட்டினாள்
நேர் வழியில் மாற்றினாள்',
'இதயவீணை தூங்கும்போது பாடமுடியுமா?',
'நதியெங்கே போகிறது கடலைத்தேடி'
'அழகு சிரிக்கிறது.. ஆசை துடிக்கிறது'
'ஏன் அழுதாய் ஏன் அழுதாய் என்னுயிரே ஏன் அழுதாய்?'
என்று ஏகப்பட்ட இனிமையான பாடல்கள் அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தன. கே.வி. மகாதேவன் இசைக்கு, பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதி இருந்தார். நான் இங்கே குறிப்பிடவருவது அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு நகைச்சுவைப் பாடலையே.

இருவர் உள்ளம் படத்தில் ஆறு பிள்ளைகளுக்கு அப்பாவாக எம் ஆர் ராதா நடித்திருந்தார். எம்.ஆர். ராதாவுக்கு மனைவியாக ரி.பி.முத்துலட்சுமி நடித்திருந்தார். திரைப்படத்தில் இருவரும் இணைந்து பாடுவது போல் ஒரு தாலாட்டுப் பாடல் இருக்கும்.

'புத்திசிகாமணி பெற்ற பிள்ளை இது புன்னகை செய்யுது சின்னப்பிள்ளை..' என்பதே அந்தப் பாட்டு.

அந்தப் பாட்டின் இடையில் 'அசட்டுப்பய பிள்ளை ஆராரோ' என்ற வரி வரும். ஒரு தந்தையே தன் மகனுக்கு தன்னை அசடன் என்று சொல்லி தாலாட்டுப் பாடுவது ரசிக்கக் கூடியதாக இருந்தது.

காசி ராமேஸ்வரம் போய் ஆறு குளம் எல்லாம் குளித்து வந்தாலும் மனிதனுக்கு ஆசை என்பது போகாது என்பதை பாடலில் நோகாமல் சொல்லி இருப்பார்கள். எம் ஆர் ராதா தான் இப்படியான வசனங்களுக்குப் பொருத்தமானவர் ஆனால் பாடலில் ரி.பி.முத்துலட்சுமி சொல்வது போல் அமைந்திருக்கும்.

ஏ.எல்.ராகவன், எல்.ஆர் ஈஸ்வரி இணைந்து பாடிய இந்தப் பாடலும் அன்று இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டதுதான்.
https://www.youtube.com/watch?v=YYto4UqG46g

Friday, 26 December 2014

கமலுடன் கடைசியாக பணிபுரிந்த இரு மேதைகள்

மிழ்த்திரையுலகம் மட்டுமின்றி உலக திரைப்பட கலைஞர்களே வியந்து பார்க்கும் அளவுக்கு கோலிவுட்டில் ஒரு திரைப்பட கலைஞர் உண்டு என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசன் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அவர் திரையுலகில் வியந்து பார்த்தது இரண்டெ இரண்டு பேர்தான். ஒருவர் நாகேஷ், மற்றொருவர் கே.பாலசந்தர். இவர்கள் இருவரையுமே கமல் எப்போதும் தனது மானசீக குருவாகத்தான் கருதி வாழ்ந்து வருகிறார்.






இந்நிலையில் நாகேஷ், கே.பாலசந்தர் ஆகிய இருவரும் நடித்த கடைசி திரைப்படம் கமல்ஹாசன் படம்தான் என்பது ஒரு அபூர்வ ஒற்றுமையாக அமைந்துள்ளது. நாகேஷ் நடித்த கடைசி படம் கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவந்த 'தசாவதாரம். அதேபோல் ஒருசில படங்களில் மட்டுமே திரையில் தோன்றிய பாலசந்தர் நடித்த கடைசி படம் இன்னும் சில நாட்களில் வெளிவர இருக்கும் 'உத்தம வில்லன்'. 



நாகேஷ், பாலசந்தர் ஆகிய இரு மேதைகளும் கடைசியாக கமல்ஹாசனுடன் பணிபுரிந்துவிட்டுத்தான் இப்பூவுலகை விட்டு இறைவனடி சேர்ந்துள்ளனர் என்பதை நினைக்கும்போதே சிலிர்ப்பாக உள்ளது.
காதலர் தினம், காதல் தேசம் போன்ற படங்களை இயக்கியவர் கதிர். கடந்த 2002ம் ஆண்டு காதல் வைரஸ் படம் இயக்கியபிறகு மாயமானார். 12 வருடமாக காணாமல்போயிருந்த கதிர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என தேடியபோது சான்டல்வுட் பக்கமிருந்து குரல் கேட்டது. அவர் கூறியது:சர்வதேச ரீதியில் ஒரு படம் இயக்குவதற்காக எனது நேரத்தை இத்தனை நாள் செலவழித்து வந்தேன். தேச தந்தை காந்தியின் வரலாற்றை படமாக்குவதற்கான பணியில் கடந்த 6 வருடமாக மும்முரமாக ஈடுபட்டிருக்கிறேன். இதற்காக காந்தி பயணித்த இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று தகவல் திரட்டினேன். இது சவாலான படம். அவரது வாழ்க்கை கதையாக இது உருவாகிறது. மக்களை கவர்ந்தவர்களைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கு தேச தந்தை காந்தியைவிட இன்னொருவர் யாரையும் என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.இதற்கிடையில் கன்னடத்தில் புதிய படம் இயக்குகிறேன். காதல் சம்பந்தமில்லாத படமாக இது உருவாகிறது. இதில் பணியாற்றும் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே புதுமுகங்கள்தான் என்றார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14801&id1=3#sthash.ih0Y8bay.dpuf
காதலர் தினம், காதல் தேசம் போன்ற படங்களை இயக்கியவர் கதிர். கடந்த 2002ம் ஆண்டு காதல் வைரஸ் படம் இயக்கியபிறகு மாயமானார். 12 வருடமாக காணாமல்போயிருந்த கதிர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என தேடியபோது சான்டல்வுட் பக்கமிருந்து குரல் கேட்டது. அவர் கூறியது:சர்வதேச ரீதியில் ஒரு படம் இயக்குவதற்காக எனது நேரத்தை இத்தனை நாள் செலவழித்து வந்தேன். தேச தந்தை காந்தியின் வரலாற்றை படமாக்குவதற்கான பணியில் கடந்த 6 வருடமாக மும்முரமாக ஈடுபட்டிருக்கிறேன். இதற்காக காந்தி பயணித்த இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று தகவல் திரட்டினேன். இது சவாலான படம். அவரது வாழ்க்கை கதையாக இது உருவாகிறது. மக்களை கவர்ந்தவர்களைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கு தேச தந்தை காந்தியைவிட இன்னொருவர் யாரையும் என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.இதற்கிடையில் கன்னடத்தில் புதிய படம் இயக்குகிறேன். காதல் சம்பந்தமில்லாத படமாக இது உருவாகிறது. இதில் பணியாற்றும் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே புதுமுகங்கள்தான் என்றார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14801&id1=3#sthash.ih0Y8bay.dpuf
காதலர் தினம், காதல் தேசம் போன்ற படங்களை இயக்கியவர் கதிர். கடந்த 2002ம் ஆண்டு காதல் வைரஸ் படம் இயக்கியபிறகு மாயமானார். 12 வருடமாக காணாமல்போயிருந்த கதிர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என தேடியபோது சான்டல்வுட் பக்கமிருந்து குரல் கேட்டது. அவர் கூறியது:சர்வதேச ரீதியில் ஒரு படம் இயக்குவதற்காக எனது நேரத்தை இத்தனை நாள் செலவழித்து வந்தேன். தேச தந்தை காந்தியின் வரலாற்றை படமாக்குவதற்கான பணியில் கடந்த 6 வருடமாக மும்முரமாக ஈடுபட்டிருக்கிறேன். இதற்காக காந்தி பயணித்த இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று தகவல் திரட்டினேன். இது சவாலான படம். அவரது வாழ்க்கை கதையாக இது உருவாகிறது. மக்களை கவர்ந்தவர்களைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கு தேச தந்தை காந்தியைவிட இன்னொருவர் யாரையும் என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.இதற்கிடையில் கன்னடத்தில் புதிய படம் இயக்குகிறேன். காதல் சம்பந்தமில்லாத படமாக இது உருவாகிறது. இதில் பணியாற்றும் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே புதுமுகங்கள்தான் என்றார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14801&id1=3#sthash.ih0Y8bay.dpuf
காதலர் தினம், காதல் தேசம் போன்ற படங்களை இயக்கியவர் கதிர். கடந்த 2002ம் ஆண்டு காதல் வைரஸ் படம் இயக்கியபிறகு மாயமானார். 12 வருடமாக காணாமல்போயிருந்த கதிர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என தேடியபோது சான்டல்வுட் பக்கமிருந்து குரல் கேட்டது. அவர் கூறியது:சர்வதேச ரீதியில் ஒரு படம் இயக்குவதற்காக எனது நேரத்தை இத்தனை நாள் செலவழித்து வந்தேன். தேச தந்தை காந்தியின் வரலாற்றை படமாக்குவதற்கான பணியில் கடந்த 6 வருடமாக மும்முரமாக ஈடுபட்டிருக்கிறேன். இதற்காக காந்தி பயணித்த இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று தகவல் திரட்டினேன். இது சவாலான படம். அவரது வாழ்க்கை கதையாக இது உருவாகிறது. மக்களை கவர்ந்தவர்களைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கு தேச தந்தை காந்தியைவிட இன்னொருவர் யாரையும் என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.இதற்கிடையில் கன்னடத்தில் புதிய படம் இயக்குகிறேன். காதல் சம்பந்தமில்லாத படமாக இது உருவாகிறது. இதில் பணியாற்றும் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே புதுமுகங்கள்தான் என்றார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14801&id1=3#sthash.ih0Y8bay.dpuf
காதலர் தினம், காதல் தேசம் போன்ற படங்களை இயக்கியவர் கதிர். கடந்த 2002ம் ஆண்டு காதல் வைரஸ் படம் இயக்கியபிறகு மாயமானார். 12 வருடமாக காணாமல்போயிருந்த கதிர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என தேடியபோது சான்டல்வுட் பக்கமிருந்து குரல் கேட்டது. அவர் கூறியது:சர்வதேச ரீதியில் ஒரு படம் இயக்குவதற்காக எனது நேரத்தை இத்தனை நாள் செலவழித்து வந்தேன். தேச தந்தை காந்தியின் வரலாற்றை படமாக்குவதற்கான பணியில் கடந்த 6 வருடமாக மும்முரமாக ஈடுபட்டிருக்கிறேன். இதற்காக காந்தி பயணித்த இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று தகவல் திரட்டினேன். இது சவாலான படம். அவரது வாழ்க்கை கதையாக இது உருவாகிறது. மக்களை கவர்ந்தவர்களைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கு தேச தந்தை காந்தியைவிட இன்னொருவர் யாரையும் என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.இதற்கிடையில் கன்னடத்தில் புதிய படம் இயக்குகிறேன். காதல் சம்பந்தமில்லாத படமாக இது உருவாகிறது. இதில் பணியாற்றும் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே புதுமுகங்கள்தான் என்றார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14801&id1=3#sthash.ih0Y8bay.dpuf
காதலர் தினம், காதல் தேசம் போன்ற படங்களை இயக்கியவர் கதிர். கடந்த 2002ம் ஆண்டு காதல் வைரஸ் படம் இயக்கியபிறகு மாயமானார். 12 வருடமாக காணாமல்போயிருந்த கதிர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என தேடியபோது சான்டல்வுட் பக்கமிருந்து குரல் கேட்டது. அவர் கூறியது:சர்வதேச ரீதியில் ஒரு படம் இயக்குவதற்காக எனது நேரத்தை இத்தனை நாள் செலவழித்து வந்தேன். தேச தந்தை காந்தியின் வரலாற்றை படமாக்குவதற்கான பணியில் கடந்த 6 வருடமாக மும்முரமாக ஈடுபட்டிருக்கிறேன். இதற்காக காந்தி பயணித்த இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று தகவல் திரட்டினேன். இது சவாலான படம். அவரது வாழ்க்கை கதையாக இது உருவாகிறது. மக்களை கவர்ந்தவர்களைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கு தேச தந்தை காந்தியைவிட இன்னொருவர் யாரையும் என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.இதற்கிடையில் கன்னடத்தில் புதிய படம் இயக்குகிறேன். காதல் சம்பந்தமில்லாத படமாக இது உருவாகிறது. இதில் பணியாற்றும் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே புதுமுகங்கள்தான் என்றார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14801&id1=3#sthash.ih0Y8bay.dpuf

Monday, 8 December 2014

சகலகலா வல்லவன் பட வெற்றி ருத்ரய்யாவுடன் நான் சேர்வதைத் தடுத்தது!- கமல்

இயக்குநர் ருத்ரய்யாவின் முதல் படத்தின் நாயகனான கமல் ஹாஸன், அவருடனான தனது அனுபவங்கள் நினைவுகளை தி இந்து நாளிதழில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதோ கமலின் நினைவுப் பகிர்வு...

"சினிமாவில் எனது வழிகாட்டிகளில் ஒருவரான அனந்து தான் முதன்முதலில் ருத்ரய்யா குறித்து என்னிடம் பேசியது. 'திரைப்படக் கல்லூரியிலிருந்து புத்திசாலி மாணவர்' என குறிப்பிட்டார். ருத்ரய்யாவின் இயற்பெயர் ஆறுமுகம். அவரை அப்படித்தான் நாங்கள் முதலில் அறிந்திருந்தோம்.

சென்னை திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற துடிப்புள்ள இளைஞர். அங்கு மாணவர்கள் யூனியனுக்குத் தலைவராக இருந்து தீவிரமாக செயல்படும் போராளியாகவே பெயர் பெற்றிருந்தார். தமிழ் சினிமாவை உருமாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த நான், ஆர்.சி. சக்தி, அனந்து ஆகியோர் அடங்கிய எங்கள் குழுவிற்கு சீக்கிரத்திலேயே நெருக்கமானார்.
சகலகலா வல்லவன் பட வெற்றி ருத்ரய்யாவுடன் நான் சேர்வதைத் தடுத்தது!- கமல்

நாங்கள் சந்தித்தால் மணிக்கணக்கில் எங்கள் பேச்சு நீளும் என்பதால் எங்களது சந்திப்பு குறித்து அச்சப்பட்டவர்களும் இருந்தனர். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் பிரசன்னா என்ற பாத்திரத்தில் ஒன்றி நடிப்பதற்கு ருத்ரய்யா எனக்கு உதவினார். அந்தப் பாத்திரத்தைப் போலவே ருத்ரய்யாவும் இடதுசாரி கொள்கை உடையவர் என்பதால், அவரால் எனக்கு சிறப்பாக வழிகாட்ட முடிந்தது. முதன்முதலில் ஆறுமுகத்துடன் எனது நினைவுகள் இதுவே.

எங்களது உரையாடல்கள் எனக்கு ஞாபகத்தில் உள்ளன. கோடார்ட், போலன்ஸ்கி, ரோஸெலினி, பிரெஸ்ஸான் ஆகிய இயக்குநர்களது படங்கள் எங்கள் பேச்சில் அடிக்கடி வந்து போகும். சென்னை திரைப்படக் கல்லூரியில் அவருக்கு இருந்த செல்வாக்கை வைத்து, வெளிநாட்டுத் திரைப்படங்களை வரவழைத்து, பார்த்து, அதை ஒரு நாள் தாமதமாக பூனே திரைப்படக் கல்லூரிக்கு அனுப்புவோம். எல்டாம்ஸ் சாலையில் ஒரு சிறிய திரைப்பட விழாவைப் போலவே இருக்கும்.

நாங்கள் பெருமைபட்டுக் கொள்ளுமாறு, தமிழ் சினிமாவை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்லுமாறு ஒரு திரைப்படத்தை எடுக்க நினைத்தோம். அதன் விளைவே 'அவள் அப்படித்தான்'.

கோபத்தால் உந்தப்பட்ட ஆளாக ஆறுமுகம் எனக்குத் தோன்றினார். ஒருவேளை அதனால்தான் தன் பெயரை ருத்ரய்யா என்று மாற்றிக் கொண்டார் என நினைக்கிறேன்.

அவரது முதல் படம் எங்கள் குழுவின் செல்லப் படமாக இருந்தது. அதனால் வெறும் பேச்சு மட்டுமல்ல, செய்தும் காட்டுவோம் என மற்றவர்களிடமிருந்து நாங்கள் வித்தியாசப்பட்டு நின்றோம். ஒரு வருடத்திற்கு 20 படங்கள் வரை நான் நடித்த காலகட்டம் அது. எனவே, என் ஓய்வு நேரத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது. அப்படி இருந்தும் படத்திற்கு எங்களால் சிறப்பான வடிவத்தைத் தர முடிந்தது.

அவள் அப்படித்தான் படத்தின் முதல் காட்சியில், நான் கேமராவைப் பார்த்து "கொஞ்சம் லெஃப்ட்ல உட்காருங்க" என்று கூறுவது, இடதுசாரி சிந்தனையை ரசிகர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும் என ஊக்குவிக்கும் குறியீடுதான். அப்போதைய தமிழ் சினிமாவின் மீது இருந்த கோபத்தின் விளைவாகவே அவள் அப்படித்தான் துவங்கப்பட்டது. சலிப்பை ஏற்படுத்தும் படமாக அது மாற வாய்ப்பிருந்தது, ஆனால் அப்படி ஆகவில்லை.

பணத் தட்டுப்பாடு இருந்ததால் தொழில்நுட்ப ரீதியில் படத்துக்கு சிறப்பு சேர்க்க முடியாமல் போனது. அப்போது, இளையராஜா பிஸியாக இருந்தார். ஆனாலும் எங்களுக்காக அவரை வலுக்கட்டயமாக இசையமைக்க வைக்க முடிந்தது.

கையில் கிடைத்த கேமராவைக் கொண்டு, எங்களை வைத்து ருத்ரய்யா நடத்திய படப்பிடிப்பு ஆச்சரியமானதாக இருந்தது. எங்கள் நோக்கம் ஒழுங்காக இருந்ததால், சிறிய பட்ஜெட்டாக இருந்தாலும் அனந்து, ரஜினி, ஸ்ரீப்ரியா போன்றோர் படத்தில் இணைய ஒப்புக் கொண்டனர். பெண் விடுதலையைப் பற்றி அனந்து அப்போதே எழுதினார்.

படப்பிடிப்பு சமயத்திலும் நாங்கள் வெளிநாட்டுத் திரைப்படங்கள் குறித்து நிறையப் பேசுவோம். ஒவ்வொரு காட்சிக்கு முன்பும், இதை கோடார்ட் எடுத்தால் எப்படி எடுப்பார், கேமராவின் கோணம் எப்படி இருக்கும் என பேசிக் கொண்டிருப்போம். ஐந்து மாதங்கள், இரண்டு இரண்டு மணி நேரங்களாக எங்கள் படப்பிடிப்பு நடந்தது. படத்தைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது.
'ராஜா என்னை மன்னித்துவிடு' என்ற ருத்ரய்யாவின் இரண்டாவது படத்திலும் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தப் படத்தை எங்களால் தொடங்க முடியவில்லை. அந்தப் படத்தின் கதை சிறப்பாக இருந்தது. ஆனால் 'சகலகலா வல்லவன்' போன்ற படங்களின் வெற்றி, எங்கள் கூட்டணியை தடுத்தது. தமிழ் சினிமாவில் ராஜபார்வைக்குப் பிறகு என் மீதான நம்பிக்கை மிகுந்தது. அதே வேளையில், 'சகலகலா வல்லவன்' திரைப்படத்தில் நான் நடித்தது ருத்ரய்யாவுக்கு பிடிக்கவில்லை.

வணிக ரீதியிலான படங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டுதான் நாம் நினைக்கும் சிறந்த படங்களை எடுக்க முடியும் என்று அவரை சமாதனப்படுத்தியது என் நினைவில் உள்ளது. அப்போது அவர் 'கிராமத்து அத்தியாயம்' திரைப்படம் எடுத்தார். அதில் எங்களுக்குள் சில கருத்து வேறுபாடு நிலவியது. அந்தக் கரு எனக்குப் பிடித்திருந்தாலும், அவள் அப்படித்தானில் இருந்த அடர்த்தி அதில் இல்லை.

ருத்ரய்யா வித்தியாசமான மனிதர். சிறந்த விமர்சனங்களைவிட, வணிகரீதியிலான வெற்றியையே நாம் நினைவில் வைத்துக் கொண்டாடுவது பரிதாபகரமானது. ருத்ரய்யாவிடம் பல படங்களுக்கான கதைகள் இருந்தன. ஆனால், அவரால் இரண்டு படங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இப்படிப்பட்ட கலைஞர்கள் விரக்தியடைக் கூடாது என்றுதான் மேற்கத்திய நாடுகளில் 'சன்டான்ஸ்' போன்ற திரைப்பட விழாக்கள் நடத்தப்படுகின்றன. அவள் அப்படித்தான் படத்தை நினைவுகூர்வதன் மூலம் மாற்று சினிமாவுக்கான தளத்தை அமைக்க சிலர் முயற்சிக்கலாம்.

தனது படைப்பின் மீது அதீதமான பெருமை கொண்டவராக ருத்ரய்யா இருந்தார். வேறு யாரிடமும் பணியாற்ற அவர் விரும்பவில்லை. சினிமாவைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்ததால், தன்னை யாரும் கட்டுப்படுத்துவதை அவர் விரும்பவில்லை. தான் கட்டுப்படுத்துவதையே அவர் விரும்பினார். அவள் அப்படித்தான் திரைப்பட தயாரிப்பில் இருந்த தோழமை, மற்ற படங்களிலும் இருக்கும் என்று அவர் நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை.

ஒரு வருடத்திற்கு முன்னால் அவரை சந்தித்தேன். அப்போதும்கூட, அடுத்த படம் எடுப்பதற்கான நம்பிக்கையை அவர் விட்டுவிடவில்லை. உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். படம் எடுப்பது போதையைப் போல. சிலர் விலகினாலும், சிலர் தொடர்ந்து முயற்ச்சித்திக் கொண்டே இருப்பார்கள். ருத்ரய்யா இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். அதற்காக அவரை நான் மதிக்கிறேன். துறையிலிருந்து அவருக்கும் இன்னும் உதவிகள் செய்யப்பட்டிருக்கலாம். பாரதியின் கவிதைகளுக்காக அவரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது போல, ருத்ரய்யாவும் அவர் எடுத்த ஆகச் சிறந்த படத்திற்காக நினைவில் நிற்பார்.

தமிழ் சினிமாவின் அடித்தளத்தையே உலுக்கிய 'அவள் அப்படித்தான்' எடுத்ததற்காக இந்த உலகம் அவரை என்றும் நினைவுகூரும். இன்றும் கல்லூரி மாணவர்கள் பலர், படத்தைப் பார்த்து, இது எப்படி இவர்களால் சாத்தியமானது என்று யோசிக்கின்றனர். சினிமாவின் மீது காதல் கொண்ட ஒருவராக ருத்ரய்யா என் நினைவில் நிற்கிறார். ஒரு காட்சி சிறப்பாக வரவேண்டும் என்றால், தெர்மகோலை தூக்கிப் பிடிக்கும் வேலை செய்யவும் தயங்கமாட்டார் ருத்ரய்யா.

Sunday, 1 July 2012

கண்ணதாசன் ஸ்டைலில் நா.முத்துக்குமார்



8 ஆண்டுகளாக திரைப்படங்களுக்கு பாடல் எழுதிக்கொண்டிருப்பவர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.
நினைத்து நினைத்து பார்த்தேன், அக்கம் பக்கம் யாருமில்லா, அவள் அப்படி ஒன்றும் அழகில்லை என அவருடய பல நூற்றுக்கணக்கான பாடல்கள் அவரது தனித்தன்மையை உறுதி செய்துகொண்டு, இசையுலகில் பிரபலமாக திகழ்பவை.

நான் கவிஞர் கண்ணதாசன் போல இசையமைப்பாளர் முன்னிலையில் உட்கார்ந்து, மெட்டு போட்டவுடன் பாடல் எழுதுவதையே விரும்புகிறேன். அதுதான் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் எனும் நா.முத்துக்குமாரிடம், அவருடைய கவிப்பயணம் குறித்து கேட்ட போது,

ஒருபாடல் எழுத அரைமணியிலிருந்து, 2 மணி நேரத்துக்குள் ஆகும். ஒரு படத்துக்கு 5 இலிருந்து 6 பாடல்கள் தேவைப் பட்டாலும் அதை ஒரே நாளிலேயே எழுதி முடித்து விடுவேன். மிக எளிமையான நடையில், ஆழமான கருத்துக்களை இனிமையாகவும் கொடுத்து விடுவதாக இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் சொல்கிறார்கள். நானும் அப்படிக் கொடுப்பதைத்தான் கொள்கையாக வைத்திருக்கிறேன். அதோடு நான் எழுதும் பாடல் வரிகள் காட்சிப்பூர்வமாக இருப்பதாகவும், கதையை விளக்கி சொல்ல வசதியாகவும் இருப்பதாக இயக்குனர்கள் சொல்கிறார்கள்.

நடிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை என்றாலும், உணர்ச்சிப் பூர்வமாக பாடல் வரிகளை விரைவில் கொண்டுவருவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால்தான் பாடல் வரிகளே காட்சியை விவரிக்கும் படி என்பாடல்கள் அமைந்து விடுகிறது. தோனி திரைப்படத்தில் வரும் வாங்கும் பணத்துக்கும் பாக்குற வேலைக்கும் சம்மந்தமில்லை என்கிற பாடல் இளைஞர்களைக் கவரும் விதமாக அமைந்திருந்தது.

நிறைய இளைஞர்கள் என்னைப் பாராட்டினார்கள். தோனி படத்தில் அனைத்துப் பாடல்களும் நான்தான் எழுதினேன். இப்போது கவுதம் மேனன் இயக்கிக் கொண்டிருக்கும் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் 8 பாடல்களும் நான்தான் எழுதியிருக்கேன். மும்பையில் எழுதி பதிவு செய்தோம். அதன்பிறகு சிம்பொனி இசைக்காக கவுதம் மேனனும், இசைஞானியும் லண்டன் சென்றார்கள்.

நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் அத்தனைப் பாடல்களும் மிக நன்றாக வந்திருக்கிறது. உலகெங்கிலும் உள்ள இசைஞானியின் ரசிகர்களுக்கு இது நல்ல விருந்தாக இருக்கும் என்கிறார்.

இவரின் கைவண்ணத்தில் 60 க்கும் மேற்பட்ட பாடல்கள் கொண்ட திரைப்படங்கள் வெளிவரத் தயார்நிலையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.