Monday 17 April 2017

சுமார் மூஞ்சி குமார் சம்பளம் முகத்தை கண்டு வியக்கும் தமிழ் சினிமா

உழைப்பு மட்டுமே ஒருவனை உயர்த்தும் என்ற நம்பிக்கை கொண்டவர் அந்த நடிகர். காரணம், மிகவும் கஷ்டப்பட்டு, தன்னுடைய கடின உழைப்பால் மட்டுமே இன்று நிலையான இடத்தைப் பிடித்திருக்கிறார் அவர். அதனால், தன்னாலான உதவிகளை சினிமாக்காரர்களுக்குச் செய்வது அவருடைய வழக்கம்.

 

 
அத்துடன், ‘தான் பெரிய அப்பாடக்கர்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் நடிகர்களுக்கு மத்தியில், தன்னுடைய கேரக்டர் நன்றாக இருந்தால், எந்த வேடமாக இருந்தாலும் ஏற்று நடிப்பவர். வயதான தாத்தா முதல் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என இவரை நம்பிப்போய் ஏமாறதவர்கள் ஏராளம்.
 
அவரைப் பற்றி வந்த சமீபத்திய தகவல்தான் இது. பெரிய கம்பெனி தயாரிக்கும் படம், நன்றாக கலெக்‌ஷன் அள்ளும் படம் என்றால் ஒரு சம்பளமும், சின்ன தயாரிப்பாளர், புது முயற்சி என்றால் குறைவான சம்பளமும் வாங்கிக் கொள்கிறாராம். தான் வளர்ந்த சினிமாவுக்கு நல்லது செய்யும் இவரைப் பார்த்து வியக்கிறார்கள் அனைவரும்.

No comments:

Post a Comment