ஒருகாலத்தில் ஓஹோவென்றிருந்த
ரத்னம் கடனாளியாகி கார், பங்களாவை தொலைத்து நாற்பதாயிரம் ரூபாய்க்கு மாதச்
சம்பளத்துக்கு போகிற நிலைமைக்கு ஆளானார்.
நிலைமை தெரியாமல் அகலக்கால் வைத்தது ஒரு
காரணம் என்றால், அப்பாவின் பணத்தில் பிள்ளை ஜோதி கிருஷ்ணா படம்
எடுக்கிறேன் என்று கோடிகளை தண்ணீராய் இறைத்தது இன்னொரு காரணம். இதில்
புத்திர பாசத்தில் ரத்னம் இழந்த கரன்சிகள்தான் கணிசம்.
ரத்னம் மீண்டும் கரையேறுகிறவரை காத்திருந்த
ஜோதி கிருஷ்ணா மீண்டும் படம் எடுக்கிறேன் என்று களத்தில்
இறங்கியிருக்கிறார். இந்த கரன்சி விளையாட்டுக்கு பைனான்சியர்... வேறு யார்
ரத்னம்தான்.
தெலுங்கில் கோபிசந்தை வைத்து ஜோதி
கிருஷ்ணா ஒரு படம் இயக்கப் போகிறார். சினிமாவின் ஆனா ஆவன்னா தெரியாமலே பல
படங்கள் இயக்கி காசை கரியாக்கியவர் இப்போது மட்டும் கரன்சியை கொட்டி
கோடிகளா அள்ளப் போகிறார்? கடைசியில் கிடைக்கப் போவது வெறும் கரிதான் என்று
இப்போதே முணுமுணுக்கிறது கோடம்பாக்கம்.
புத்திர பாசத்தில் இன்னொருமுறை தவறிழைத்தால் கைகொடுக்க அஜித் இருக்கிறார் என்ற தைரியமா ரத்னத்துக்கு?
No comments:
Post a Comment