Sunday 12 July 2015

பாகுபலி சொல்லும் செய்திகள்!

பாகுபலி படத்தை பார்த்தபிறகு அப்படம் சினிமாவில் பலருக்கும் நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. நிறைய செய்திகளைச் சொல்லியுள்ளது. தான் சாதாரண ஆள் ஷங்கர் அளவுக்கு இல்லை என்று ராஜமௌலி கூறினாலும்,.பிரமாண்டம் என்றால் அது ஷங்கரால் மட்டுமே முடியும் என்கிற நம்பிக்கையை பாகுபலி தகர்த்துள்ளது என்றே கூறவேண்டும், பாகுபலியின் நிலவரம் பற்றி ஷங்கர் விசாரித்து வருகிறாராம், அவரது விசாரிப்பில் அவரது பதற்றம் புரிகிறதாம்.தென்னிந்திய மொழிகளில் 250 கோடி பட்ஜெட்டில் படம் என்கிற வரலாற்றைப் பாகுபலி சாத்தியமாக்கியுள்ளது.



பாகுபலி ஒரு தெலுங்கு டப்பிங் படம் என்று ஒரு கருத்து பேசப்பட்டாலும் சிலரால் பரப்பப்பட்டாலும் உழைப்பில், உருவாக்கத்தில் தெலுங்கு உழைப்பு என்ன, தமிழ் உழைப்பு என்ன இயக்குநரின் கடின உழைப்பை மதிக்க வேண்டும் என்று பார்வையாளர்களை எண்ண வைத்துள்ளது.

பாகுபலி ஒரு இயக்குநரின் படமாகவே அறியப்படுகிறது,பேசப்படுகிறது, இதில் பணியாற்றியுள்ள நவீன தொழில் நுட்பக்கலைஞர்கள் பெரும்பாலும் நம்நாட்டின் உள்ளூர் கலைஞர்கள்தான்.

ராஜமௌலி நட்சத்திரங்களை உயர்த்திப் பிடிக்கும் இயக்குநர் ரகமல்ல என்பது அவர் டைட்டில் கார்டு போடும்போதே தெரிகிறது.படம் ஆரம்பிக்கும் முன் தொழில் நுட்பக்கலைஞர்களின் பெயர்களைத்தான் முதலில் போடுகிறார், படம் முடிந்தபின்தான் நடிகர்களின் பெயர்களைப் போட்டுள்ளார். இதிலிருந்து ராஜமௌலி பின்னணியில் முகம் காட்டாது இயங்கும் உழைக்கும் கலைஞர்களை மதிப்பவர் என்பது புரிகிறது. இது நட்சத்திர நிழலில் குளிர்காயும் நம் இயக்குநர்களுக்கு வராத தெளிவு, துணிவு,

இதுவரை பிரமாண்டத்துக்கு என்றால் ஷங்கரையே அடையாளம் காட்டினார்கள், இனி அப்படிக்காட்ட முடியாது - ராஜமௌலி வந்துவிட்டார். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு அல்லவா? இதை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்?

No comments:

Post a Comment