Sunday 12 July 2015

ராஜமௌலிக்குப் பாராட்டு, தவிக்கும் பாலிவுட் இயக்குனர்கள்

'பாகுபலி' படம் கதை ரீதியாக ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் உருவாக்கத்தில் இந்தியத் திரையுலகின் அனைத்து இயக்குனர்களிடத்திலும் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதிரியான ஒரு படத்தை ஹாலிவுட்டில் உருவாக்க வேண்டுமென்றால் 'பாகுபலி'படத்திற்கு ஆன செலவை விட பல மடங்கு அதிகமாகும். ஆனால் 200 கோடி ரூபாய்க்குள் ஒரு சாதனையை ராஜமௌலி நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். இது அவரைப் போன்ற திறமையான இயக்குனர்களைப் பாராட்ட வைத்துள்ளது. தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் ஏற்கெனவே ராஜமௌலிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.




ஹிந்தித் திரையுலகின் முக்கியமான இயக்குனரான சேகர் கபூர் ராஜமௌலியை மிக அதிகமாகப் பாராட்டி ஹிந்தித் திரையுலகின் முன்னணி இயக்குனர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டுள்ளார். சேகர் கபூர் இரண்டு நாட்களுக்கு முன் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “வாழ்த்துக்கள் ராஜமௌலி, உங்கள் படத்திற்கு மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. லாஸ் ஏஞ்சல்சில் படம் பார்க்க ஆவலுடன் காத்துள்ளேன். தென்னிந்திய இயக்குனர்கள் வட இந்திய இயக்குனர்களை விட துணிவு மிக்கவர்கள். ராஜமௌலி போன்ற துணிவு மிக்க இயக்குனர்கள் மும்பையில் இல்லையே,” என்ற அவருடைய வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது சில முன்னணி பாலிவுட் இயக்குனர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம். மேலும் கரண் ஜோஹர் இந்தப் படத்தை ஹிந்தியில் வெளியிட்டு ஒரு தென்னிந்திய இயக்குனருக்கு ஹிந்தித் திரையுலகிலும் ஒரு அடையாளத்தை ஏற்படுத்துவதை சிலர் விரும்பவில்லை என்றும் பாலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. - 

No comments:

Post a Comment