ஹைதராபாத்: தெலுங்கு, தமிழ் சினிமாக்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை
காஜல் அகர்வால், இனி கிளாமர் கலந்த படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று
அறிவித்து அவரது ரசிகர்களின் நெஞ்சில் பாலை வார்த்திருக்கிறார்.
தமிழில் பழனி படத்தில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால். பக்கம் பக்கமாக
அதில் வசனம் பேசி பயமுறுத்தியிருப்பார்.
அதன் பின்னர் துப்பாக்கி, ஜில்லா, போன்ற வெற்றி படங்களில் நடிகர் விஜயுடன்
இணைந்து நடித்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகையான காஜலுக்கு தற்போது சொல்லிக்கொள்ளும் படியான
வாய்ப்புகள் எதுவும் இல்லை. இந்த நிலையில்தான் கவர்ச்சியாக மட்டுமே
நடிப்பேன் என்று கூறியுள்ளார் காஜல்.
தமிழில் கைவசம் தனுசுடன் நடித்து வரும் மாரி, விஷாலுடன் பாயும் புலி, மர்ம
மனிதன் போன்ற படங்களில் நடித்து வரும் காஜல் கிளாமர் குறைந்த மற்றும்
வில்லத்தனமான வேடங்களில் நடிப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும் ரசிகர்கள்
என்னை கிளாமராகவே பார்க்க மட்டுமே ஆசைப்படுகிறார்கள் எனவே கிளாமர் குறைந்த
வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று அழுத்தம் திருத்தமாக
அறிவித்திருக்கிறார்.
கோடை வெயிலுக்கு ஏற்ற மாதிரி ஜில்லுனு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கும்
காஜலுக்கு கோவில் கட்ட யாராவது கிளம்பினாலும் கிளம்பலாம்!
No comments:
Post a Comment