Thursday 19 February 2015

அஜித்தை நினைத்து போட்ட கணக்கு தாப்பா போச்சே

நாங்கள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்று புலம்பி வருகின்றனர் அனேகன் படக்குழுவினர். அஜித் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 5 ஆம் திகதி ரிலீஸான படம் என்னை அறிந்தால். முதலில் இப்படம் ஜனவரி கடைசியில் வெளியாக இருந்தது.

ajith

பின்னர் தியேட்டர் பிரச்சினை காரணமாக பிப்ரவரி 5 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது. இதனால் அந்த நேரத்தில் வெளியாக இருந்த சில படங்களின் ரிலீஸ் தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டன.

ஆனால், என்னை அறிந்தால் ரிலீஸான அடுத்த வாரத்திலேயே தனுஷின் அனேகன் படம் களமிறங்கியது. அஜித் படம் வெளியாகி ஒரு வாரமாகி விட்டதாலும், படம் கலந்த விமர்சனங்களை பெற்றதாலும், நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நினைத்தார்கள் அனேகன் படக்குழுவினர்.

ஆனால், என்னை அறிந்தால் படம் இன்னமும் ஓடிக்கொண்டிருப்பதால், அந்த படத்தை திரையிட்டிருக்கும் எந்த தியேட்டர்காரர்களும் அனேகன் படத்துக்கு தியேட்டர்கள் கொடுக்க தயாராக இல்லையாம். அதனால், தங்கள் படம் வெளியானதும் என்னை அறிந்தால் திரையிட்டிருக்கும் நிறைய தியேட்டர்கள் காலியாகி நம் பக்கம் திரும்பி விடும் என்று எதிர்பார்த்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் கணக்கு தவறாகி விட்டதாம்.

இப்போது வெறும் 207 தியேட்டர்களில் மட்டுமே (தமிழகத்தில்) அனேகனை திரையிட்டிருக்கும் அவர்கள் தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் எதிர்பார்த்த வசூல்கூட இன்னும் கைசேரவில்லையாம்.

No comments:

Post a Comment