Wednesday 11 February 2015

லிங்கா - சிவலிங்கா.. மாட்டி முழிக்கும் ரஜினி, வேடிக்கை பார்க்கும் மகள்..!

ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம் லிங்கா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் உலகம் முழுவதும் 3 ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸானது. தமிழ் நாட்டில் 750 தியேட்டர்களில் திரையிட்டனர். ரஜினி 4 வருடங்களுக்குப் பிறகு நடித்து நேரடி படமாக வந்ததால் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் படம் எதிர்பார்த்த வசூலை தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் லிங்கா படத்தால் தாங்கள் பல கோடி நஷ்டமடைந்துவிட்டதாகச் சொல்லி போராட்டத்தில் ஈடுப்பட்டனர் விநியோகஸ்தர்கள்..

 
   மேலும் இப்பிரச்னையில் நடிகர் ரஜினிகாந்த் தலையிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கப்புறம் ரஜினியே அந்த பிரச்சனையில் நீர் ஊற்றி அணைத்த கதை இன்டஸ்ட்ரி அறிந்ததுதான். அதாவது நஸ்டத்தை திருப்பி தரேன் என்று ஒப்புக்கொண்டதுதான்.
ஆனால் லிங்கா படத்தால் சுமார் 33 கோடி ரூபாய் நஷ்டம் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். அப்படியிருக்க ரஜினி தரப்பிலிருந்து தருவதாக ஒப்புக் கொண்டது பதினைந்துதானாம். இந்த பதினைந்தும் எப்போது வரும் என்று நகத்தை கடித்தப்படி காத்து கொண்டிருக்கிறார்களாம் விநியோகஸ்தர்கள். இருந்தாலும் இந்த முழு தொகையையும் ரஜினி எப்படி கொடுப்பார்? அல்லது நஷ்டத்தை அவர் ஒருவர் மட்டுமே ஏற்றுக் கொள்வது எவ்விதத்தில் சாத்தியம் என்ற கேள்விகள் எழாமல் இல்லை.


தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கொஞ்சம், மொத்த விநியோகஸ்தரான ஈராஸ் கொஞ்சம், ரஜினி கொஞ்சமுமாக பிரித்துக் கொள்வதுதானே முறை? இதனால் பிரச்சனையை ஈராஸ் நிறுவனத்திடம் கொண்டு சென்றார்களாம். இது தொடர்பாக மும்பைக்கு போய் பேசிவிட்டு வந்தாராம் ராக்லைன் வெங்கடேஷ். அவரிடம், நாங்க திருப்பி கொடுக்கிற ஐடியாவே இல்ல. அதுமட்டுமல்ல, நாங்க கார்ப்பரேட் நிறுவனம். பேப்பர்ல என்ன இருக்கோ, அதன்படிதான் செயல்பட முடியும். பேப்பர்ல படம் நஷ்டமானா திருப்பி தர்றேன்னு எங்கயாவது போட்ருக்கோமோ என்றார்களாம்.

ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர் பொறுப்பு வகிக்கும் ரஜினி மகள் செளந்தர்யா இதை கேள்விப்பட்டு கம்பெனி பக்கம் இருக்குறதா, அப்பா பக்கம் இருக்குறதா.. இல்ல நஷ்டப்பட்டவர்கள் பக்கமும் இருக்குறதா என்று சைலண்டாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாம். பாவம் அவர் மட்டும் என்ன செய்ய முடியும்.

No comments:

Post a Comment