திருஷ்டி பரிகாரம் மாதிரி, வருடா வருடம்
தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு இடையே கருத்து வேறுபாடு என்று சர்ச்சை கிளம்பும்.
தனுஷும், எனக்கும் என் மனைவிக்கும் எந்தப் பிரச்சனையுமில்லை என, மனைவியின்
அருமை பெருமைகளை பட்டியலிடுவார். இந்த வருடமும் கதை தொடர்கிறது.
தனுஷ் - ஐஸ்வர்யா கருத்துவேறுபாடு என்ற ஊடகங்களின் வதந்தியைத் தொடர்ந்து மனைவியின் தாராள குணத்தை தனுஷ் எடுத்துரைத்தார்.
"என்னை அழகாக மாற்றியவர் ஐஸ்வர்யா. அது மட்டுமின்றி வீட்டில் என் குடும்பத்தினரையும் நன்றாக கவனித்து கொள்கிறார்.
ஐஸ்வர்யா, எனது குழந்தைகள், சகோதரர், தந்தை உள்ளிட்டோருடன் சேர்ந்து
வாழ்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. பிசியாக நடித்து விட்டு வீட்டுக்கு
வரும்போது அமைதியும், சந்தோஷமும் கிடைக்கிறது. தொழில்ரீதியாக
என்னால் அடிக்கடி வீட்டில் இருக்க முடியாது. அப்போது ஐஸ்வர்யா குடும்பத்தை
கவனித்துக் கொள்கிறார். என் குழந்தைகள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களை
பார்த்துக் கொள்கிறார். இதைவிட நான் என்ன எதிர்பார்க்க முடியும்.
ஐஸ்வர்யா துணிச்சலான பெண். அதோடு அழகான நல்ல தாயாகவும் இருக்கிறார். என்
தாயிடமும் பாராட்டு பெற்றுள்ளார். எனது மூத்த மகனுக்கு எட்டு வயது. இளைய
மகனுக்கு ஆறு வயது ஆகிறது. அவர்கள் என்னை மாதிரி இருக்கிறார்கள்.
நான் நடித்த சந்தோஷமான படங்களை அவர்களை பார்க்க வைப்பேன். சோகமாக முடியும்
படங்களை காட்டுவது இல்லை. நான் பெருமைபடும்படி எதிர்காலத்தில் அவர்கள்
வாழ்க்கை அமையும்."
வதந்தி கிளப்புகிறவர்கள், தனுஷின் இதுபோன்ற விளக்கங்களை கேட்காமலிருப்பதற்காவது வதந்தி கிளப்புவதை தயவு செய்து நிறுத்த வேண்டும்.
No comments:
Post a Comment