Thursday 1 January 2015

ஜோதிகா படத்துக்கு சூர்யா போட்ட ஆர்டர்!

2009ல் சீதா கல்யாணம் என்ற மலையாள படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை ஜோதிகா. சில வாய்ப்புகள் தேடிவந்தபோதுகூட இப்போது நடிப்பதாக இல்லை என்று தவிர்த்து வந்தார். ஆனால் நல்ல கதையில் மீண்டும் ரீ-என்ட்ரியாக வேண்டும் என்பதற்காக கதை கேட்பதை தொடர்ந்து வந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி தமிழில் கதைகளில் கிடைக்காத நிலையில், மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த ஹவ் ஓல்டு ஆர் யூ படம் இருந்ததால் அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.

 
 
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாஜி ஹீரோ ரகுமான் நடிக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்தது. அதையடுத்து இப்போது சென்னையிலுள்ள பின்னி மில்லில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த முறை, சில கமர்சியல் நடிகர்-நடிகைகளும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஜோதிகா முன்பு நடித்த படங்களில் நடிப்பவர்களுக்கு இடைவெளி கொடுப்பார்கள். ஒரு காட்சியில் நடித்து முடித்ததும் ஓய்வெடுப்பார்கள். ஆனால். இப்போது அப்படி எதுவும் கொடுக்கப்படவில்லையாம். 
 
அடுத்தடுத்து அவர்களுக்கான காட்சிகளை படமாக்குகிறார்களாம். இதனால் அவசரத்துக்கு ஒரு செல்போன்கூட பேச முடியவில்லையாம். அந்த அளவுக்கு ஜோதிகா தவிர மற்றவர்களின் காட்சிகளை சில நாட்களிலேயே படமாக்கி அவர்களை அனுப்புவதற்காக வேகம் காட்டுகிறார்களாம். இதற்கு காரணம், இந்த படததை தயாரிக்கும் சூர்யா பட்ஜெட்டை அதிகப்படுத்தினால் வியாபாரம் செய்வது கடினம் என்று சொல்லி, குறைவான நாட்களிலேயே படப்பிடிப்பை நடத்தி முடித்து விட வேண்டும் என்று ஆர்டர் போட்டுள்ளாராம்.

No comments:

Post a Comment