Monday 8 December 2014

ஒரு பட தோல்வியால் பிரபுதேவாவின் சம்பளம் குறைந்தது

பாலிவுட்டுக்குபோய் ஜமாய்க்கிறார் என்று பிரபுதேவாவை பார்த்து கோலிவுட்டில் சிலரின் வயிறு கப கபத்தது. வான்டட், ரவுடி ரத்தோர், ஆர்.ராஜ்குமார் போன்ற படங்கள் அவருக்கு வசூல் ரீதியாக கைதூக்கிவிட்டது.அவர் இயக்கத்தில் அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா நடித்த ‘ஆக்ஷன் ஜாக்சன்‘ படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. கதாபாத்திரத்துக்காக உடம்பை வருத்தி சிக்ஸ் பேக் தோற்றத்துக்கு மாறினார் அஜய். படத்தின் டைட்டிலுக்கு ஹாலிவுட் நிறுவனம் ஒன்றும் சர்ச்சை கிளப்பியது. எல்லாவற்றையும் கடந்து படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது.




மவுத் டாக் மந்தமாக இருப்பதுடன் விமர்சனங்களும் எதிராக வந்துக்கொண்டிருக்கின்றன. படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகவில்லை என்று இணைய தளங்களில் தகவல் பரபரக்கிறது. எதிர்மறையாக படம் பற்றி கமென்ட்ஸ் வந்துக்கொண்டிருப்பதால் பிரபுதேவாவின் அடுத்த படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வேகமாக வளர்ந்துவந்த பிரபுதேவாவுக்கு இதன் மூலம் பாலிவுட் இயக்குனர்கள் சிலர் பிரேக் போடும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். அடுத்து அக்ஷய்குமார் நடிக்கும் படத்தை அவர் இயக்க ஒப்பந்தமானார். இந்த படத்துக்கு பேசப்பட்ட சம்பளத்தை விட குறைவாகத்தான் தர முடியும் என தயாரிப்பு நிறுவனம் வீம்பு செய்கிறதாம். இதனால் என்ன செய்வதென யோசனையில் மூழ்கிவிட்டாராம் பிரபுதேவா.

No comments:

Post a Comment