தெலுங்கு
சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் மகேஷ்பாபு சமீபத்தில் தெலுங்கு
பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் 'தனது குடும்பத்தினர் பலர்
அரசியலில் செல்வாக்காக இருந்தாலும் தனக்கு அரசியலில் விருப்பமில்லை என்றும்
தனது கவனம் முழுவதும் சினிமாவில் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மகேஷ்பாபு - நம்ரதா தம்பதிகளுக்கு கெளதம், சித்தாரா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன. தனது குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மகேஷ்பாபு, 'முதலில் அவர்கள் படிப்பை நன்றாக முடிக்க வேண்டும். அதன்பின்னர் அவர்களுக்கு எந்த துறையில் விருப்பம் இருக்கின்றதோ அந்த துறையில் ஈடுபட நான் அவர்களுக்கு ஊக்கமளிப்பேன்' என்று கூறியுள்ளார்.
மேலும் தனது மகள் சித்தாரா ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று மனம் திறந்து கூறியுள்ளார். சினிமாவில் பிரபலமாக உள்ளவர்கள் தங்கள் வாரிசுகளை சினிமாவிலோ அல்லது அரசியலிலோ இறக்கிவிடும் தற்போதைய காலகட்டத்தில் மகேஷ்பாபுவின் கனவு அவரது திரைப்படங்களை போலவே வித்தியாசமாக உள்ளது.
மகேஷ்பாபு - நம்ரதா தம்பதிகளுக்கு கெளதம், சித்தாரா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன. தனது குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மகேஷ்பாபு, 'முதலில் அவர்கள் படிப்பை நன்றாக முடிக்க வேண்டும். அதன்பின்னர் அவர்களுக்கு எந்த துறையில் விருப்பம் இருக்கின்றதோ அந்த துறையில் ஈடுபட நான் அவர்களுக்கு ஊக்கமளிப்பேன்' என்று கூறியுள்ளார்.
மேலும் தனது மகள் சித்தாரா ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று மனம் திறந்து கூறியுள்ளார். சினிமாவில் பிரபலமாக உள்ளவர்கள் தங்கள் வாரிசுகளை சினிமாவிலோ அல்லது அரசியலிலோ இறக்கிவிடும் தற்போதைய காலகட்டத்தில் மகேஷ்பாபுவின் கனவு அவரது திரைப்படங்களை போலவே வித்தியாசமாக உள்ளது.
No comments:
Post a Comment