Tuesday 2 December 2014

தமிழ்ப்பட ரீமேக்கை தவிர்க்கும் மகேஷ்பாபு

விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் 
மிக முக்கியமானவை போக்கிரி, கில்லி. 
இவை இரண்டு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. 
இந்த இரண்டு படங்களின் ஒரிஜினலும் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த படங்கள். 
அதுமட்டுமல்ல, இரண்டுமே தெலுங்கில் சூப்பர்ஹிட்டான படங்கள். 
 மகேஷ்பாபுவின் படங்களின் தமிழ் ரீமேக்கில் நடிக்க விஜய் ஆர்வம் காட்டுவதுபோல், 
விஜய் நடிக்கும் தமிழ்ப்படங்களை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க மகேஷ்பாபு 
விரும்புவதில்லை. 
இதை மகேஷ்பாபுவே நேற்று நடைபெற்ற ஒரு விழாவில்
வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். 
குறிப்பாக, சமீபத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க
 மகேஷ்பாபுவுக்கு விருப்பமில்லையாம். 
சமீபத்தில் ஆந்திராவை கடுமையாக தாக்கிய ஹுட் ஹுட் புயலில்
 பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் தெலுங்குத் திரையுலகம்
 கலைநிகழ்ச்சியை நடத்தியது.
அதில் மகேஷ்பாபுவை சமந்தா பேட்டி எடுப்பதுபோல் ஒரு நிகழ்ச்சி.  
 
 
 
 அப்போது நீங்கள் சமீபத்தில் மிகவும் ரசித்துப் பார்த்த படம் எது? 
என்ற கேள்வியை மகேஷ்பாபுவிடம் கேட்டார் சமந்தா.
அதற்கு பதில் அளித்த மகேஷ்பாபு, விஜய் நடித்த கத்தி படத்தை நான் 
மிகவும் விரும்பிப் பார்த்தேன். விஜய் மிக அற்புதமாக நடித்திருந்தார். 
படமும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. என்னை இப்படத்தின் ரீமேக்கில் 
நடிக்கச் சொல்லி சில அழைப்புகள் வந்தன. ஆனால், அதை நான் மறுத்துவிட்டேன். 
ஏனென்றால் ஒரு மொழியில் ஹிட்டான படத்தை 
இன்னொரு மொழியில் ரீமேக் செய்யும்போது அதே அளவுக்கு சிறப்பாக செய்ய முடியும்
 என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. 
கத்தி என்றால் விஜய்தான் ஞாபத்திற்கு வருவார். நான் எதை செய்தாலும்,
 அது கத்தியில் விஜய் செய்ததையே பிரதிபலிக்கும். 
இதுபோன்ற பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ள எனக்கு 
விருப்பமில்லை! என்று பதில் அளித்தார் மகேஷ்பாபு.

No comments:

Post a Comment