Friday 14 August 2015

என்னமோ தெரியலை ஒரு தெம்பு வருது

ஏன் ரஜினி படப் பெயரை உங்கள் படத்தின் பெயராக வைத்திருக்கிறீர்கள் என்று யாரிடம் கேட்டாலும், மேலே உள்ளது போல்தான் பதிலளிக்கிறார்கள். சுசீந்திரன் விஷாலை வைத்து இயக்கியிருக்கும் படம், பாயும் புலி. ஏன் இந்த பெயர்?
 
 
அந்த பெயரை வச்சாலே பாதி விளம்பரம் கிடைச்சிடுது என்றார் சுசீந்திரன். தவிர, படத்திலும் விஷால், முதலில் பதுங்கி பிறகு பாய்வாராம், புலி மாதிரி. அதனால் இந்த பெயர் ஆப்டாக இருக்கும் என்று தேர்வு செய்தோம் என்றார். 
 
பாபி சிம்ஹாவின் படத்தின் பெயர், வீரா. ஏன் வீரா? ஹீரோ ரொம்ப வீரமானவர். சண்டையெல்லாம் போடுவார் என்று எகனை மொகனையாக ஏதாவது சொல்வார்கள். அதனால் கேட்கவே இல்லை. இதேபோல் ஜானி, பாட்ஷா, அண்ணாமலை என்று ரஜினியின் படப்பெயர்களை தங்கள் படங்களுக்கு வைக்க ஒரு கூட்டம் அலைகிறது. 
 
கதையை நம்பினால் எதுக்கு பெயருக்கு பின்னால் ஓடணும்?

No comments:

Post a Comment