Sunday 21 June 2015

காமெடியன்களின் காலைவாரும் கதாநாயக ஆசை

என்னாலதான் படமே ஓடுது, அதனால் இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று இனிமே இப்படிதான் படத்தை எடுத்தார் சந்தானம். படத்தைப் பார்க்க தியேட்டரில் ஆளில்லை. வடிவேலுவும் அப்படியொரு முடிவில் எடுத்த தெனாலி அவுட். நேற்று வெளியான எலியின் ரிசல்டும் கிலி கிளப்புகிறது.
 


காமெடியன்கள் எப்போதும் தொட்டுக்க ஊறுகாய்தான். அதுவும் சந்தானம் கவுண்டர் டயலாக் மற்றும் இரட்டை அர்த்த வசனம் மூலமாக மட்டுமே சிரிப்பை உற்பத்தி செய்பவர். ஹீரோவுக்கு இந்த இரண்டுமே அந்நியம். உடன் நடிக்கும் துணை கதாபாத்திரங்களை ஹீரோ இரண்டரை மணிநேரமா கலாய்க்க முடியும்? காதல், ஆக்ஷன் என்று வரும்போது சந்தானத்தைப் பார்க்க ரசிகர்களால் முடியவில்லை. இனிமே இப்படிதான் படத்திலும் துணை கதாபாத்திரங்களை கலாய்த்துதான் ஓரளவு ஒப்பேற்றினார் சந்தானம். 

ஒரு படம் ஒகே. எல்லா படத்திலும் இது சாத்தியமா?
 

வடிவேலுவின் அப்பாவித்தனமும், அடிவாங்கும் விதமும், வெகுளித்தனமுமே அவரது நகைச்சுவையின் ஊற்றுக்கண். அதைவிட்டு அவர் கருத்து சொல்றேன் என்று காட்சிகளில் கடுப்படிக்கும் போது வடிவேலு என்ற என்டர்டெய்னர் மறைந்து போகிறார். இந்திரலோகத்தில் நா அழகப்பனிலேயே இந்தத் தவறைதான் செய்தார். எலியிலும் அது தொடர்கிறது.
 
சிரிக்க வைத்தவர்களே சித்திரவதை செய்வது கொடுமைதான்.

No comments:

Post a Comment