சூர்யாவின் சினிமா பயணத்தில் சிங்கம் படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இப்படத்தை ஹரி இயக்கியிருந்தார்.
இப்படம் பெரிய வெற்றியடைந்ததை அடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் சூர்யாவை வைத்து ஹரி இயக்கியிருந்தார்.
சிங்கம்-2 என்ற பெயரில் வெளிவந்த இப்படம் சிங்கம் படத்தைவிட பெரிய வெற்றி பெற்றது.
இரண்டு வெற்றிகளை பெற்றுவிட்ட சிங்கம்
படத்தின் மூன்றாம் பாகத்தையும் எடுக்க ஹரி முடிவு செய்துள்ளார். இந்த
படத்திலும் சூர்யா-அனுஷ்கா நடிக்கவிருக்கின்றனர்.
மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சிங்கம் 2-ம் பாகத்தில் ஹன்சிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல்,
இந்த மூன்றாம் பாகத்தில் ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க ஹரி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சூரியும் இந்த படத்தில் முக்கிய
கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு
அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment