இந்த ஷாக்கிங் நியூஸ் கோடம்பாக்கத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
பாலா படத்தில் நடிப்பவர்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள்.
அப்படியொரு உருக்கு இதயம் இல்லையென்றால் சமாளிப்பது கஷ்டம். நான் கடவுள்
படத்தின் நாயகி கண் தெரியாத பிச்சைக்காரி என்பதால், பூஜாவுக்கு முன்பு அந்த
கதாபாத்திரத்துக்கு தேர்வான தூத்துக்குடி கார்த்திகாவை பிச்சைக்காரி வேஷம்
போட்டு நிஜமாகவே பிச்சை எடுக்க வைத்தார் பாலா. இது படப்பிடிப்புக்கு முன்
நடத்தப்பட்ட வெள்ளோட்டம்.
ரிகர்சலே இப்படியென்றால், நிஜமாக படப்பிடிப்பு நடக்கையில் கண்களை
தோண்டிவிடுவார்களோ என்ற பயத்தில் மயக்கம் போட்டு விழுந்தவர், பாலா
படத்திலிருந்து மட்டுமில்லை, திரையுலகிலிருந்தே ஓட்டம் பிடித்தார்.
அவருக்கும் இருக்காதா உயிர் ஆசை.
தாரை தப்பட்டையில் வரலட்சுமிக்கு பாலியல் தொழிலாளி வேடம் என்கிறது தாரை
தப்பட்டை வட்டாரம். இதில் வரலட்சுமியின் நடிப்பைப் பார்த்து கண் கலங்கிய
பாலா, அவருக்கு கைக்கடிகாரம், தங்க சங்கிலி ஆகியவை பரிசளித்ததாக தகவல்.
பரிசு முக்கியமில்லை. அப்படி என்ன காட்சியில் வரலட்சுமி நடித்தார்?
வில்லன்கள் வரலட்சுமியை சித்திரவதை செய்யும் காட்சியாம் அது. சாதாரண
காட்சிக்கே நடிகர்களை நையப்புடைக்கும் பாலா இந்த பலாத்கார காட்சியை எப்படி
எடுத்திருப்பார் என்பதை நினைக்கையில் குலை நடுங்குகிறது. இந்த காட்சியில்
நடித்த போது வரலட்சுமியின் தோள்பட்டை எலும்பு விலகியதாம். இதற்கு மேல் என்ன
சொல்ல.
பாலா எதற்கும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வரலட்சுமி ஆர்யா, சூர்யா
மாதிரியில்லை. கரளை கரளையான மசில் கொண்ட சரத்குமார் என்ற அப்பா அவருக்கு
இருக்கிறார்.
No comments:
Post a Comment