உலக பிரசித்தி பெற்றுள்ள, 3
திரைப்பட பாடலான ”வொய் திஸ் கொலவெறி” பாடலுக்கு எதிராக அப் பாடலை தடை
செய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ் ”கொலவெறி” பாடல் இளைஞர்களின் மனதை தீயவழிப்படுத்துவதாக கூறியே மேற்படி வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தபால் உதவியாளராக பணிபுரியும், எம். மாடஸ்வாமி என்பவராலேயே ”கொலைவெறி” பாடலுக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இப் பாடல் வரிகள் வன்முறையை தூண்டுவதாகவும், இது இளைஞர்களை தவறான வழிக்கு இட்டு செல்லுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ஆதாரமாக
அமெரிக்காவின் லோவா ஸ்டேட் பல்கலைகழகம், வன்முறை பாடல்கள் தொடர்பில்
வெளியிட்ட ஆராட்சி முடிவையும் சமர்ப்பித்துள்ளார் மனுதாரர்.
No comments:
Post a Comment